தீக்கதிர் முக்கிய செய்திகள்
11 May 2026, 10:09 pm
<p><strong>ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்</strong></p><p>தேசபக்தியின் பெயரால் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயுவைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டுமாம். ஆனால் மோடி ஜி மட்டும் லட்சக்கணக்கான மக்களைத் தனது பேரணிகளுக்கு அழைத்து வருவாராம். வெளிநாட்டுப் பயணம் செல்வாராம். </p><p><strong>பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்</strong></p><p>மக்கள் சிக்கனமாக இருக்க வேண்டும் என மோடி பேசிய அதே தினத்தில் அதற்கு நேர்மாறாக அவர் விமானம், ஹெலிகாப்டர்களில் பயணித்தார். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பெரிய அளவில் அதிக வாகனங்களுடன் சென்றார். </p><p><strong>ஆர்ஜேடி எம்பி மனோஜ் குமார் ஜா</strong></p><p>நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அரசு தனது செலவுகளை குறைத்ததாக தெரியவில்லை. கடந்த ஒரு வாரமாக அனைத்து செய்தித்தாள்களிலும் முழுப்பக்க விளம்பரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செலவை யார் ஏற்கிறார்கள்? சாமானிய மக்கள் தானே?</p><p><strong>சிபிஎம் எம்பி ஜான் பிரிட்டாஸ்</strong></p><p>பிரதமர் மக்களுக்கு ஏழு கோரிக்கைகளை வைத்துள்ளார். அதில் குறிப்பாக வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரதமர் மோடி முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.</p><p><br></p>
