‘அன்புச்சோலை’ மையங்கள் திறப்பு
10 Nov 2025, 2:46 pm
<p><strong>‘அன்புச்சோலை’ மையங்கள் திறப்பு</strong></p>
<p>மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்கென ரூ. 10 கோடி மதிப்பில் 25 ‘அன்புச்சோலை’ மையங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திங்களன்று திறந்து வைத்தார். திருச்சி பொன்மலையில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மூத்த குடிமக்களுடன் அமர்ந்து முதல்வர் கேரம் விளையாடினார். மதுரை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி உள்பட 10 மாநகராட்சிகளில் தலா 2 என அன்புச்சோலை மையங்களும், இவை தவிர ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரியில் தலா 2, சென்னையில் 3 அன்புச்சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.</p>
