முந்தய பக்கம்

சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!

14 Nov 2025, 1:26 pm
சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!
<p><strong>சவுண்டம்மன் கோவிலை திறந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாத்திடுக!&nbsp;</strong></p> <p>சிபிஎம் ஆர்ப்பாட்டம்</p> <p>அருப்புக்கோட்டை, நவ.14- விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஒன்றி யம், &nbsp;கட்டங்குடி ஊராட்சிக் குட்பட்டது அம்மா நகர். இங்கு சவுண்டம்மன் கோ வில் உள்ளது. இதை &nbsp;வரு வாய்த்துறை நிர்வாகம் &nbsp;கடந்த 4 வருடங்களுக்கு முன்பு &nbsp;பூட்டியது. &nbsp;இக்கோ விலை திறந்து விடக் கோரி பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, கோவிலை திறந்து பக்தர்களின் வழி பாட்டு உரிமையை பாது காக்க வேண்டும் என வலி யுறுத்தி &nbsp; மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை ெற்றது. இப்போராட்டத்திற்கு ஏ.சிவராமன் தலைமை யேற்றார். ஒன்றிய செயலா ளர் எம்.கணேசன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம். முத்துக்குமார் &nbsp;உரையாற்றி னார். &nbsp; மேலும் இதில் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் எம். காமாட்சி நாதன், லீலாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram