திறந்த நிலையில் போர்வெல் பைப்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>திறந்த நிலையில் போர்வெல் பைப்</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 9- குமாரபாளையத்தில் உள்ள தனியார் நிலத்தில் பாதுகாப்பற்ற திறந்த நிலையில் போர்வெல் பைப் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்துள்ள தட்டான்குட்டை ஊராட்சி, கல் லங்காட்டுவலசு பகுதியில் சின்னாயக்காடு செல்லும் வழியில் உள்ள தனியார் நிலத்தில் போர்வெல் போடப்பட்டது. இந்த போர்வெல் போடப்பட்ட இடத்தில், பைப் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அவ்வழியில் அதிக குடியிருப்புகள் உள்ளன. குழந்தைகள் அதிக அளவில் இப்பகுதியில் விளையாடி வருவது வழக்கம். இந்நிலையில், இந்த போர்வெல் பைப் மூடப்படாமல் உள்ளதால், அப் பகுதி மக்கள் அச் சத்தில் உள்ளனர். இதுகுறித்து சம் பந்தப்பட்ட அதி காரிகளை தொடர்பு கொண்டு, போர் வெல் பைப் மூடி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் குழந்தை கள் இது போன்ற போர்வெல் குழாய்களில் விழுந்து, உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.</p>
