தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு

6 May 2026, 12:58 am
உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு
<p><strong>உதகை நகரில் முகாமிட்ட ஒற்றை யானை வனத்திற்கு விரட்ட ட்ரோன் கண்காணிப்பு</strong></p><p>உதகை, மே.5- உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டினஸ் சாலையில் காட்டு யானை புகுந்த தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ள னர். </p><p> நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப் பகுதி யில் கரடி, புலி, யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் அதிகளவில் வசித்து வருகின் றன. </p><p>இவற்றில் கரடி, யானை உள்ளிட்ட விலங்குகள் காட்டுப் பகுதியில் இருந்து வெளியேறுவதால் மனித - விலங்கு மோதல் கள் அதிகரித்துள்ளன. </p><p>இந்தநிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, முதல் முறையாக கடந்த ஆண்டு கோடை சீசன் சமயத்தில் குன்னூரில் இருந்து ஒரு யானை முதல் முறையாக ஊட்டி அடுத்த 7 கி.மீ., தொலைவில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்துக்கு வந்தது. </p><p> தொட்டபெட்டா மலை சிகரம் மூடப்பட்டு, காட்டு யானை வேறு பகுதிக்கு சென்ற பின்னர் திறக்கப்பட்டது. </p><p>இதன் பின்னர் ஊட்டியை ஒட்டி உள்ள பன்சிட்டி அருகில் உள்ள வனப் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. </p><p>இத னால் யானையின் நடமாட்டத்தை வனத் துறையினர் கண்காணித்து வந்தனர். </p><p>இந்தநிலையில், செவ்வாயன்று அதி காலை திடீரென இந்த காட்டு யானை உதகை நகரின் மையப்பகுதியில் உள்ள எட்டின்ஸ் சாலையில் வலம் வந்தது. </p><p>அங்குள்ள தனி யார் மருத்துவமனை வளாகத்திற்குள் சென்று அங்கிருந்து, சாலையில் ஒய்யார மாக நடந்து சென்றது.</p><p> நகரில் மேலும் ஒரு சில இடங்களுக்கு சென்றது. </p><p>அதிகாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப் பகுதியில் யானை சுற்றித்திரிந்ததாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். </p><p>அங்கிருந்த காய்கறி தோட்டங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. </p><p>தற்போது, எல்க்ஹில் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இங்கு வனத்துறையினர் ட்ரோன் வாயிலாக கண்காணித்து வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.