மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி
17 May 2026, 12:45 am
<p><strong>மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் மதுக்கடை வியாபாரிகள், பொதுமக்கள் கடும் அவதி</strong></p><p>உதகை, மே 16- உதகை, வண்டிப்பேட்டை பகு தியில் செயல்பட்டு வரும் மதுபானக் கடையை மூட வேண்டும் என அப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர். </p><p>நீலகிரி மாவட்டத்தில் 70க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் செயல் பட்டு வரும் நிலையில், தற்போதை அரசின் உத்தரவுப்படி 27 கடை களை மூட திட்டமிடப்பட்டுள்ளது. </p><p>இதுகுறித்து உயர் அதிகாரிக ளுக்கு டாஸ்மாக் கடைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. </p><p>முதற் கட்டமாக, உதகை மெயின் பஜார் பகுதியிலுள்ள மதுக்கடை மற்றும் பந்தலூரில் உள்ள மதுக்கடை மூடப்பட்டன.</p><p> இதைத்தொடர்ந்து, உதகை நகரில் மேலும் 5 கடை கள் மூடப்பட்டுள்ளன. </p><p>கமர்சியல் சாலையில் மூன்று கடைகள் மூடப் பட்டுள்ளன. இதனால், வண்டி பேட்டை பகுதியிலுள்ள மதுக்கடை யில் கூட்டம் குவிகிறது. </p><p>உதகை மார்க்கெட் அருகே இப்பகுதி உள் ளதாலும், வண்டிபேட்டை பகுதி யில் விவசாயி கருவிகள், பட்டறை கள், அங்காடிகள் உள்ளதால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இடமாக இப்பகுதி உள்ளது. </p><p>மக்கள் நடமாட் டம் அதிகமுள்ள இப்பகுதியில் மதுக்கடை திறக்கப்பட்டபோதே, மக்கள் மற்றும் அப்பகுதி வியாபாரி கள் கடுமையாக எதிர்த்தனர். </p><p>அதை யும் மீறி அப்பகுதியில் மதுக்கடை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மார்க் கெட் சுற்று வட்டாரத்தில் 5 மதுக் கடைகள் மூடப்பட்டதால், மதுப்பிரி யர்கள் வண்டிபேட்டை கடையை முற்றுகையிட்டு வருகின்றனர். </p><p>அப் பகுதிலேயே மதுக்கூடம் செயல் படுவதால், மதுப்பிரியர்கள் மது வாங்கி அங்கேயே குடிக்கின்றனர். </p><p>சிலர் அடாவடியிலும் ஈடுபடுகின்ற னர். </p><p>மேலும், மதுக்கூடம் சுகாதார மற்ற முறையில் நடப்பதால், அப் பகுதியில் கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. </p><p> இதையெல்லாம் சகித்துக் கொண்டு அப்பகுதியில் வியாபாரி கள் வியாபாரம் செய்ய வேண்டிய நிலையுள்ளது.</p><p> மேலும், வாடிக்கை யாளர்கள் திரும்பி சென்று விட கூடும் என்பதால், விரைந்து வியா பாரம் செய்கின்றனர். </p><p>அப்பகுதி யில் மதுக்கடை செயல்படுவதால், அவ்வழியாக செல்லும் பொதுமக் கள் குறிப்பாக, பெண்கள் முகத்தை சுளித்தப்படி, மூடியப்படியே செல் கின்றனர். </p><p>மக்கள் நடமாட்டம் அதிக முள்ள இப்பகுதியில் மதுக்க டையை மூட வேண்டும் என அப் பகுதி வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.</p>
