எருமைகளை அணையில் விடுவதால் அசுத்தமாகும் குடிநீர்!
12 Jun 2026, 10:20 pm
<p><strong>எருமைகளை அணையில் விடுவதால் அசுத்தமாகும் குடிநீர்!</strong></p><p>உதகை, ஜூன் 12- உதகை மார்லிமந்து அணை யில் வளர்ப்பு எருமைகள் இறங்கி குளியல் போடுவதால், குடிநீர் அசுத்தமாவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நக ராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்திற்கும் அதிக மான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், தினசரி சுற்றுலாப் பய ணிகளும் அதிகளவில் வந்து செல் கின்றனர். உதகை நகராட்சி மக்க ளுக்கு தேவையான குடிநீர் விநியோ கம் 60 சதவிகிதகம் பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து கிடைக்கிறது. இதுதவிர மார்லிமந்து உட்பட பல் வேறு சிறிய அணைகளில் இருந் தும் குடிநீர் விநியோகம் செய்யப் படுகிறது. கடந்த சில நாட்களாக மார்லிமந்து அணையில் வளர்ப்பு எருமைகள் நீண்ட நேரம் குளியல் போடுவதற்காக அமர்ந்து கொள் கின்றன. இதனால் குடிநீர் சுகாதா ரம் பாதிக்கப்படுவதாக பொதுமக் கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறு கையில், 3 மற்றும் 4 ஆவது வார்டு களுக்குட்பட்ட வண்டிச்சோலை, சர்ச்ஹில், மார்லிமந்து மற்றும் சுற்றி யுள்ள பகுதிகளுக்கு மார்லிமந்து அணையில் இருந்து குடிநீர் வி நியோகம் செய்யப்படுகிறது. இந்நி லையில், உதகை சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக் கள் வளர்த்து வரும் வளர்ப்பு எரு மைகள், உதகை நகரிலும், குடியி ருப்பு பகுதிகளிலும் உலா வருகின் றன. இவை ஏற்கனவே நகர் பகுதி யில் முக்கிய இடங்களில் சாலை களில் சுற்றி திரிவதால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது சில நேரங்களில் விபத்து ஏற்படும் அபா யம் உண்டாகிறது. இந்நிலையில், இந்த எருமைகள் சதுப்பு நிலங்களி லும், நீர் ஆதாரங்களான பகுதிகளி லும் காலை முதல் மாலை வரை படுத்து சேற்றில் புரண்டு அசுத்தப் படுத்துகின்றன. சமீபநாட்களாக வளர்ப்பு எருமைகள் குடிநீர் ஆதார மாக திகழ்ந்து வரும் மார்லிமந்து அணை பகுதியில் உலா வருகின் றன. இவை அணையின் நீரில் குளிப் பதும், அதன் சாணங்களை கழிப்ப தும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. மார்லிமந்து அணை நீர் சேறும், சகதியுமாக மாறி வரும் நிலையில் நகராட்சி விநியோகிக் கும் குடிநீர் மண் கலந்த தண்ணீ ராக குடிநீர் வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்க ளுக்கு ஆளாகியுள்ள நிலையில், முதியவர்கள் மற்றும் குழந்தைக ளுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் மார்லி மந்து அணை பகுதிக்குள் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.</p>
