தீக்கதிர் முக்கிய செய்திகள்
12 Jul 2026, 9:10 pm
<p><strong>ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா</strong></p><p>ஜம்மு-காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களுக்கு 20 முதல் 30 கோடி ரூபாய் பணமும், அமைச்சர் பதவியும் கொடுத்து பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட முயல்கிறது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மூலம் பாஜக இந்த அடாவடியை மேற்கொண்டு வருகிறது.</p><p><strong>தி ஜாமியா ஊடகம்</strong></p><p>எஸ்ஐஆர் தொடர்பாக விளக்கம் அளிக்க ஒன்றிய அரசுக்கு ஐ.நா., சபை மே 1ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டீஸ் 3 மாதத்திற்குப் பின் தற்போது தான் பொதுவெளியில் ஒரு செய்தியாக வந்துள்ளது. அதுவும் 3ஆம் கட்ட எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த உடன் ஐ.நா., சபையின் நோட்டீஸ் நாட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.</p><p><strong>கரப்பான் பூச்சி ஜனதா கட்சி</strong></p><p>கோழியை அறுத்துச் சாப்பிட்டால் அது ‘சிக்கன் பார்ட்டி (விருந்து)’, ஆட்டை அறுத்துச் சாப்பிட்டால் அது ‘மட்டன் பார்ட்டி’, ஆனால், இளைஞர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் சிதைப்பதை மக்கள் ‘பாரதிய ஜனதா பார்ட்டி’ என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.</p><p><strong>ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்</strong></p><p>ராமர் கோவிலின் முன்னாள் பொறியாளர் தீனநாத் வர்மா கூறியதன் அடிப்படையில், கோவில் கட்டுமானத்திற்காக 40% கமிஷன் பெறப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் 40% கமிஷன் வசூலிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது? ஊழல்வாதிகள் ஏன் பாதுகாக்கப்படுகிறார்கள்?</p>
