தோழர் என்.சங்கரய்யா நினைவு தினம் கடைபிடிப்பு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>தோழர் என்‌.சங்கரய்யா நினைவு தினம் கடைபிடிப்பு</strong></p>
<p>திருப்பூர், நவ.15- விடுதலைப் போராட்ட வீரர், நூற் றாண்டு கண்ட தகைசால் தமிழருமான தோழர் என்‌.சங்கரய்யாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று திருப்பூரில் கடைபிடிக்கப்பட்டது. மனிதரை மனிதர் சுரண்டும் முறையை ஒழித்திட, சோசலிச சமூக மாக இந்தியா பரிணமிக்க வேண்டும் என்ற பார்வையோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்த தோழர் என்‌. சங்கரய்யாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. திருப்பூரில் தியாகி பழனிச்சாமி நிலை யத்தின் முன்பு நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில், மாவட்டச் செய லாளர் சி.மூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப்பிரமணி, ஆர். காளியப்பன், வடக்கு மாநகர செயலா ளர் ப.சொந்தராசன் உள்ளிட்டோர் பங் கேற்றனர். அதேபோல் தோழர் என்‌.சங்கரய்யா வின் 2 ஆம் ஆண்டு நினைவஞ்சலி கூட் டம் ஊத்துக்குளி தாலுகா குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார், தாலுகா கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.மணியன், கே.ஏ.சக்திவேல், தமிழ் நாடு விவசாயிகள் சங்க தாலுகா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலமுரளி, தாலுகா பொருளாளர் நாகராஜ், கரைப்பாளை யம் கிளைச் செயலாளர் கருப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து மலரஞ்சலி செலுத்தினர்.</p>
