தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் ‘வசூல் ராஜா’ கதை!

1 Apr 2026, 4:02 pm
ஓ.எஸ். மணியனிடம் ஒரு ‘பழைய பாக்கி’! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் ‘வசூல் ராஜா’ கதை!
<p><strong>ஓ.எஸ். மணியனிடம் ஒரு &lsquo;பழைய பாக்கி&rsquo;! மயிலாடுதுறை அதிமுகவில் ஓடும் &lsquo;வசூல் ராஜா&rsquo; கதை!</strong></p> <p>சினிமாவில் &ldquo;பாக்கி வைக்காம பாத்துக்கோ&rdquo; என்று வசனம் வரும், ஆனால் மயிலாடுதுறை அதிமுகவிலோ &ldquo;பாக்கியைக் கேட்டாலே பதவி காலி&rdquo; என்ற &nbsp;புதுவிதமான அரசியல் திரில்லர் ஓடிக் கொண்டிருக்கிறது. வட்டியும் முதலும் &nbsp;வசூல் ஆகுமா? அம்மா பேரவை இணைச் செயலாளர் ஜனார்த்தனன் கிளப்பியுள்ள &lsquo;ரூ. 25 லட்சம்&rsquo; விவகாரம், மயிலாடுதுறை அதிமுகவை கதிகலங்க வைத்துள்ளது. 2016 தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியனுக்கு ஜனார்த்தனன் கடன் வாங்கித் தந்தாராம். இப்போது வட்டியுடன் சேர்த்து அந்தத் தொகை ரூ. 1.20 கோடியாக எகிறி நிற்கிறது. &ldquo;காசைக் கொடு&rdquo; என்று கேட்டால், &ldquo;கட்சியில் உனக்கு இடமில்லை&rdquo; என்று முன்னாள் அமைச்சர் கையை விரித்ததாக ஜனார்த்தனன் புலம்புகிறார். &nbsp;விக்கெட்டுகள் விழும் மைதானம்! மயிலாடுதுறையில் அதிமுக ஒரு &lsquo;கிரிக்கெட்&rsquo; &nbsp;மேட்ச் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், எதிரணி பந்து வீசாமலேயே இவர்களே &lsquo;ஹிட் விக்கெட்&rsquo; ஆகி வெளியேறுகிறார்கள். &bull;&nbsp;&nbsp; &nbsp;பி.வி. பாரதி: முன்னாள் எம்.எல்.ஏ... &ldquo;எனக்கு மரியாதையில்லை&rdquo; என்று பேட்டை தூக்கிப்போட்டுவிட்டுப் போய்விட்டார். &bull;&nbsp;&nbsp; &nbsp;செந்தில்நாதன்: &ldquo;உழைப்புக்கு அங்கீ காரம் இல்லை&rdquo; என்று அடுத்த விக்கெட்டை பறக்கவிட்டுள்ளார். &bull;&nbsp;&nbsp; &nbsp;ஜனார்த்தனன்: இவரோ ஒரு படி மேலே போய், &ldquo;மணியன் மற்றும் பவுன்ராஜ் தான் என் விலகலுக்குக் காரணம்&rdquo; என்று &lsquo;நோ-பால்&rsquo; புகாரை வீசியுள்ளார். தேர்தல் செலவா? &nbsp;தனிப்பட்ட கல்லாவா? ஒருபுறம் &ldquo;பெர்சப்ஷன் போர்&rdquo; நடத்தத் தயாராகும் அதிமுக, முதலில் சொந்தக் கட்சி நிர்வாகிகளிடம் வாங்கிய கடனைத் தீர்த்தாலே பாதிப் போர் முடிந்துவிடும் போலிருக்கிறது. 2021-இல் டெல்டா மண்டலத்தில் வாங்கிய அடி போதாது என்று, இம்முறை &ldquo;பண மோசடி&rdquo; புகார்களுடன் தேர்தல் களத்தில் குதிப்பது அதிமுகவின் &lsquo;இரட்டை இலை&rsquo;யை இன்னும் கருக வைக்குமே தவிர, துளிர்க்க வைக்காது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.