விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>விருதுநகர், ஜன.5- தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் அறிவித்த வாக்கு றுதிப்படி குறைந்தபட்ச ஓய் வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங் கன்வாடி ஓய்வூதியர் சங் கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட் டத்திற்கு மாவட்ட தலைவர் சரஸ்வதி தலைமை தாங்கி னார். மங்காள், சுசீலாமேரி, பானுமதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். போராட்டத்தை ஆத ரித்து அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கருப் பையா, ஓய்வு பெற்ற ஆசிரி யர் சங்கத்தைச் சேர்ந்த கா. சிவபெருமான், ஜெக தீசன் உள்ளிட்டோர் உரை யாற்றினர். மேலும், முன் னாள் மாநில செயலாளர் அய்யம்மாள், மாவட்ட தலை வர் பாலகிருஷ்ணன், கோவி ந்தராஜ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.</p>
