தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் கோரி திருப்பூரில் காத்திருப்புப் போராட்டம்
20 Dec 2025, 3:38 pm
<p>திருப்பூர், டிச.20- தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சனியன்று எம்ஆர்பி செவிலியர்கள் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூரில் எம்.ஆர்.பி செவிலியர் சங்க தலைவர் மீனா தலைமையில் திருப்பூர் தாரா புரம் சாலையில் உள்ள பெரிச்சிப்பாளையம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் சனிக்கிழமை முதல் எம்.ஆர்.பி.செவிலி யர்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தைத் துவங்கினர். இதில், தேர்தல் வாக்குறுதிப்படி எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செவிலியர் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண் டும். புதிதாக துவங்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உட்பட அரசு மருத் துவமனைகளில் காலியாக உள்ள செவி லியர் பணியிடங்களை எம்.ஆர்.பி., தொகுப் பூதிய செவிலியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். சம வேலைக்கு, சம ஊதியம் என்ற சென்னை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதை திரும் பப் பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். மேலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். இதில் துணைத் தலைவர் திலகவதி, செயலாளர் எபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தை ஆதரித்து மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி பேசினார். உடன் மாதர் சங்க நிர்வாகிகள் ஷகிலா, நிஷா, மினி ஆகியோர் உடனிருந்த னர். உடுமலை: சென்னையில் போராட்டம் நடத்திய செவி லியர்களை கைது செய்ததைக் கண்டித்து உடு மலையில் வெள்ளியன்று செவிலியர்கள் மற் றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் உடு மலை அரசு மருத்துவமனை வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க உடுமலை வட்டக்கிளை செயலாளர் வெங்கிடுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயலாளர் அம்சராஜ், மாவட்டச் செயலளர் பாலசுப்பிரமணியன், எம்ஆர்பி செவிலியர் சங்க நிர்வாகி சரண்யா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.</p>
