நீட் மறுதேர்விலும் குளறுபடி- ஒப்புக்கொண்ட தேசிய தேர்வு முகமை!
3 Jul 2026, 10:17 am
<p>நீட் மறுதேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டு மதிப்பெண் வழங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.</p><p>கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. ஆனால் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. அதன்பின் நடந்துமுடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் மறுதேர்வு அறிவிக்கப்பட்டது.</p><p>இந்நிலையில் ஜூன் 21ஆம் தேதி நடந்த மறுதேர்விலும் குளறுபடிகள் இருந்ததாக மாணவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.</p><p>இதனையடுத்து ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டதை ஒப்புக் கொண்டு மதிப்பெண் வழங்குவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.</p><p>மேலும் மற்றொரு கேள்விக்கு 2 விடைகள் சரியானது எனவும் அந்த கேள்விக்கு 2 விடைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்த மாணவர்களுக்கு மொத்தமாக 4 மதிப்பெண் வழங்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமையின் விடைக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
