தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!

9 May 2026, 10:43 pm
ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!
<p><strong>ராணுவத்தின் உச்ச பதவியில் தமிழகத்தைச் சேர்ந்தவர் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்பிரமணி நியமனம்!</strong></p><p>புதுதில்லி, மே 9 - இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக தமிழ்நாட் டைச் சேர்ந்த லெப்டினண்ட் ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணியை நிய மித்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. </p><p>தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர், முப்படைத் தலைமை தளபதியாக நிய மிக்கப்படுவது இதுவே முதல்முறை யாகும்.</p><p> தற்போதைய தலைமைத் தளபதி அனில் சவுகானின் பதவிக்காலம் விரை வில் நிறைவடையவிருப்பதால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p><p> ராஜா சுப்ரமணி இந்திய ராணு வத்தில் 37 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியவர். </p><p>தேசிய பாது காப்பு கல்விக்கழகம் மற்றும் இந்திய ராணுவ கல்விக்கழகத்தில் இள நிலைப் பட்டம் பெற்ற இவர், 1985 டிசம்ப ரில் கார்வால் ரைபிள்ஸ் படைப்பிரி வில் அதிகாரியாகத் தனது ராணுவ வாழ்வைத் தொடங்கினார். </p><p>முன்னதாக, சென்னைப் பல்க லைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வில் எம்.பில். பட்டம் பெற்றதோடு, தில்லி மற்றும் லண்டனிலும் உயர்கல்வி கற்றவர். </p><p>மத்திய கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதியாகவும், ராணு வத் தலைமைத் துணைத் தளபதி யாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்ட அவர், தற்போது தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.