காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடவில்லை!
4 Apr 2026, 4:02 pm
<p><strong>காட்டுமன்னார் தொகுதியில் போட்டியிடவில்லை!</strong></p>
<p>தொல். திருமாவளவன் அறிவிப்பு சென்னை: காட்டுமன்னார் தொகுதியில் தான் போட்டியிட வில்லை என்றும், தமக்குப் பதிலாக ஜோதிமணி இளையபெருமாள் போட்டியிடுவார் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தான் போட்டியிடுவதை விரும்பாதவர்கள் கட்டுக்கதைகளைச் சொல்லி கூட்டணியின் நலனை பாதிக்கும் வகையில் அவதூறு பரப்புவதைக் கருத்தில் கொண்டு, உத்தியை மாற்றி, நிலைபாட்டை தள்ளி வைக்கிறேன். அந்த தொகுதியில் தமக்கு பதிலாக சாதி ஒழிப்பு போராளி எல். இளையபெரு மாளின் இளைய மகன் ஜோதிமணி தொகுதியில் போட்டியிடு வார்” என்றார். “சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 இடங்களை வெல்லும்; தொங்கு சட்டமன்றம் அமையும் என்ற கருத்துக்கு இடமே இல்லை” என்றும் தொல். திருமாவளவன் குறிப்பிட்டார்.</p>
