தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நொய்டாவும் - சிங்கிதாராவும்

5 May 2026, 9:09 pm
நொய்டாவும் - சிங்கிதாராவும்
<p><strong>நொய்டாவும் - சிங்கிதாராவும்</strong></p><p>இரண்டு போராட்டங்கள் அண்மைக் காலங்களில் நாடு முழுவதுமான கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன. </p><p>ஒன்று, ஏப்ரல் 10 அன்று நொய்டாவில் 300 தொழிற்சாலைகளில் இருந்து வீதிகளுக்கு வந்து மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் ரூ.</p><p>20000 ஆக்கப்பட வேண்டும் என்று நடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம். </p><p>இரண்டாவது, சத்தீஸ்கரில் உள்ள வேதாந்தாவின் சிங்கிதாரா அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட உயர் அழுத்த நீராவிக் குழாய் வெடித்ததால் 20 தொழிலாளர் உயிரிழப்பு, 15 பேர் காயத்திற்கு எதிரான போராட்டம். </p><p>முதலாவது உழைப்பின் விலைக்கான போராட்டம் எனில் இரண்டாவது உயிரின் விலைக்கான போராட்டம். </p><p>அடக்குமுறையும் அரை மனதும் ஏப்ரல் 13 அன்று நொய்டாவில் 1200 காவல் துறையினர் களம் இறக்கப்பட்டனர். </p><p>அவர்களில் ஆயுதப்படை, விரைவு நடவடிக்கை பிரிவு எல்லாம் உண்டு.</p><p> தடியடி அரங்கேறியது. 400 பேர் சிறை. ஆனாலும் தொழிலாளர் போராட்டத்தின் அழுத்தத்தால் உ.பி யோகி ஆதித்யநாத் அரசாங்கம் குறைந்த பட்ச ஊதியத்தை 21% அதிகரிப்பதாக கூறி ரூ.13690 (Unskilled), ரூ.16868 (Skilled) என அறிவித்தது.</p><p> தொழிலாளர்களின் ரூ.20000 என்ற கோரிக்கை எட்டப்படவில்லை. 16,868க்கும் 20000க்கும் இடையிலான வித்தியாசம் வெறும் பேரம் சம்பந்தப்பட்டது அல்ல. </p><p>இது அந்த குடும்பம் தலை நகர பகுதியில் செலுத்துகிற வாடகை, கேஸ், பள்ளிக் கட்டணம் ஆகியவற்றிற்கும், அரசாங்கம் வழங்க விரும்பிய “கௌரவமான குறைந்தபட்ச ஊதியத்திற்குமான” வித்தியாசம். உயிரா லாபமா? சிங்கிதாரா கதையின் அடுத்த தொடர் 4 நாட்களில் வெளி வந்தது. </p><p>அந்த விபத்து காரணம் “தொடர்ந்த கவனக் குறைவு மற்றும் இயந்திர நிர்வகிப்பில் இருந்த பலவீனம்” என்று. </p><p>இந்த விபத்தில் இறந்தவர்கள் வேதாந்தாவின் சொந்த ஊழியர்கள் அல்ல, அவர்களின் சப் கான்ட்ராக்டர் மூலம் நியமனமானவர்கள் என்பது இன்னொரு எக்ஸ்போஸ். இது அங்கே நிலவும் பணியமர்த்தல் முறைமையின் பிரதிபலிப்பு. சத்தீஸ்கரில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 296 தொழிலக விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. </p><p>தெலுங்கானாவில் ஜூலை 2025இல் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் வெடிப்பு விபத்தில் 44 பேர் பலியானார்கள். </p><p>பெரும்பாலும் புலம்பெயர் தொழிலாளர்கள். அங்கே தீ எச்சரிக்கை மற்றும் முன் தடுப்பு ஏற்பாடுகள் பலவீனமாக இருந்ததாக மாநில தீயணைப்புத்துறை தெரிவித்தது. </p><p> இந்தியா முழுமையும் தொழிலக ஆலோசனை சேவை பொது இயக்குநரகம் தெரிவிக்கிற தகவல்களின்படி 2018இல் இருந்து 2020 வரை 3331 தொழிலக விபத்துக்கள் நடந்தேறி உள்ளன. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 3 விபத்துக்கள். </p><p>இவ்வளவு விபத்துக்கள் நடந்தேறி இருந்தாலும் இதற்காக தொழிலக சட்டத்தின் படி இதே காலத்தில் கைதானவர்கள் 14 பேர் மட்டுமே. </p><p> இவையெல்லாம் சம்பந்தமில்லாத தனித்தனி நிகழ்வுகள் அல்ல. </p><p>பொருளாதாரம் எத்தகைய சூழலில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடே. இந்நிலையில் வெளியான நான்கு தொகுப்பு சட்டங்கள், தொழிலாளர் பாதுகாப்பு அம்சங்களைப் பலப்படுத்துவதற்கு மாறாக மேலும் தளர்வுகளை தந்துள்ளன. </p><p>மழுங்கிப் போன சட்டங்கள் தொழில் உறவு தொகுப்பு சட்டம் 2020இல் லே ஆஃப், பணி நீக்கம், ஆலை மூடல் ஆகியவற்றை மேற்கொள்ள அரசின் முன் அனுமதி பெறுவதற்கான தொழிலாளர் எண்ணிக்கை வரம்பு 100 லிருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. </p><p>அதாவது 1982இல் இருந்த வரம்புக்கு சக்கரம் பின்னோக்கி சுழற்றப்பட்டுள்ளது. மாஸ் லே ஆஃப் அலையாக அடித்த காலத்தில், 5 லட்சம் தொழிலாளர்கள் வீதிகளில் தூக்கி எறியப்பட்ட நேரத்தில் 34 ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு அம்சம் பறிக்கப்பட்டு விட்டது.</p><p> பணித்தல பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிலைமைகள் தொகுப்புச் சட்டமும் “தொழிற்சாலை” என்பதை தீர்மானிப்பதற்கான வரையறைகளை (மின் உபயோகமெனில் 10 லிருந்து 20 என்றும், மின் உபயோகம் இல்லையெனில் 20 லிருந்து 40 என்றும்) உயர்த்திவிட்டது. </p><p>இத்தகைய தளர்வுகள் எல்லாம் பெரும்பான்மை தொழிலாளர்களை பாதுகாப்பற்றவர்களாக மாற்றியிருக்கிறது. மு</p><p>ன் தகவல் இல்லாத கண்காணிப்பு முறைமை கைவிடப்பட்டுள்ளது. </p><p>தற்போது சுய சான்றிதழ் மற்றும் மாதிரி அடிப்படையிலான சோதனை என்பது நடைமுறைக்கு வந்துள்ளது. </p><p>இது சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் தீர்மானம் எண் 81க்கு (முன் தகவல் இல்லாத சுயேச்சையான கண்காணிப்பு) விரோதமானது. </p><p>தொழிலாளர் வேலை நிறுத்தம் செய்வதானால் 60 நாட்கள் முன்னறிவிப்பு தரவேண்டும். </p><p>திடீர் வேலை நிறுத்தங்கள் செய்ய இயலாது. தீர்ப்பாய அமர்வுகள் நடைபெறும் போது அல்லது அதற்கு பிறகு சில வாரங்கள் வரை வேலை நிறுத்தங்கள் செய்ய முடியாது. தற்செயல் விடுப்பு 50 சதவீதத்திற்கு அதிகம் எனில் அது வேலை நிறுத்தமாக கருதப்படும். </p><p>அனேகமாக வேலை நிறுத்தங்களையே சாத்தியமற்றதாக இந்த தொகுப்பு சட்டங்கள் ஆக்கியுள்ளன. </p><p>எது அளவுகோல்? சட்டங்களில் மாற்றங்கள் தேவைப்படலாம். ஆனால் எத்தகைய மாற்றங்கள் என்பதே பிரச்சனை. </p><p>சட்டங்களின் தொகுப்பு, சட்டங்களின் நீர்ப்பு ஆக இருக்க முடியாது. எளிமைப்படுத்துவது என்பது தொழிலாளர்கள் இழப்பதாக இருக்க முடியாது. நொய்டாவும், சிங்கிதாராவும் தந்துள்ள மே தினச் செய்தி இதுதான். </p><p>எந்த ஒரு தொழிலாளர் சீர்திருத்தங்களும் பயன் தரக்கூடியவை என்பதற்கு இரண்டு அளவுகோல்கள் முக்கியம். </p><p>ஒன்று, தொழிலாளி வாழ்வதற்குரிய வருமானத்தை அது உறுதி செய்கிறதா, இரண்டாவது வாழ்வதையே உறுதி செய்கிறதா ஆகியனவே. நொய்டாவில் சம்பளம் அவர்கள் வாழ்க்கையை காப்பாற்றவில்லை. சிங்கிதாராவில் பணியாற்றும் தலமும் அவர்களுக்கு பாதுகாப்பு தரவில்லை. </p><p>தொழிலாளர் தொகுப்பு சட்டங்கள் யாரை பாதுகாக்க வேண்டுமோ அவர்களுக்கு எதிராகவே திருத்தி எழுதப்பட்டுள்ளன.</p><p> இந்து ஆங்கில நாளிதழில் (01.05.2026) தொழிலாளர் உரிமை கருத்தாளர் ரெஜிமான் குட்டப்பன் எழுதி வெளி வந்துள்ள கட்டுரையின் சாரம். தமிழில்: க.சுவாமிநாதன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.