குடிநீர் விநியோகம் இல்லை பெரம்பலூர் 21 ஆவது வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் தர்ணா
3 Dec 2025, 2:59 pm
<p><strong>குடிநீர் விநியோகம் இல்லை பெரம்பலூர் 21 ஆவது வார்டு கவுன்சிலர், பொதுமக்கள் தர்ணா</strong></p>
<p>பெரம்பலூர், டிச.3 - பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 ஆவது வார்டு கவுன்சிலர் பழனிசாமி, தனது வார்டு பொது மக்களுடன் செவ்வாய்க்கிழமை நக ராட்சி அலுவலகத்திற்கு வந்து திடீரென்று தர்ணா போ ராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தங்களது வார்டில் காவிரி குடிநீர் கடந்த 20 நாட்களுக்கு மேலாக விநியோகிக்கப் படவில்லை. இதனால் குடிக்க நீர் இல்லாமல் தவித்து வருகிறோம். குடிநீர் விநியோ கிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து தகவ லறிந்த நகராட்சி அலுவ லர்கள் கூறுகையில், “பெரம் பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போது கொள்ளிடம்-காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருவ தால், குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே பழுதடைந்து வருகிறது. இதனை அவ்வப் போது சரி செய்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. 21- ஆவது வார்டுக்கு செல்லும் குடிநீர் குழாயும் சேதம டைந்ததால் தற்போது சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் குடிநீர் விநி யோகிக்கப்படும்” என்றனர். பின்னர் பொதுமக்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.</p>
