முந்தய பக்கம்

எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை!

24 Nov 2025, 3:26 pm
எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை!
<p><strong>எஸ்ஐஆருக்கு கூடுதல் அவகாசம் இல்லை!&nbsp;தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி</strong></p> <p>சென்னை, நவ. 24 - தமிழக தலைமை தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக் திங்கள ன்று, செய்தியாளர்களை சந்தித்தார். &nbsp;அப்போது, &ldquo;தமிழகம் முழுவதும் 6.16 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன; எஸ்.ஐ.ஆர். நடைமுறையில் கூடுதல் அவகாசத்திற்கு வாய்ப்பில்லை&rdquo; என்றார். &nbsp;&ldquo;எஸ்.ஐ.ஆர். பணிகளை குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்; மக்க ளுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50 சதவிகிதம் திரும்ப பெறப்பட்டுள்ளன; 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்டு அனுப்பப் பட்டுள்ளன&rdquo; என்று தெரிவித்த அர்ச்சனா பட்நாயக், &ldquo;வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் எஸ்.ஐ.ஆர் படிவத்தில் நிச்சயம் பெயர் இருக்கும். கணக்கீட்டுப் படிவங்களில் தகவல்கள் சரியாக இருந்தால் எந்த படிவமும் நிராகரிக்கப்படாது. பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்தால் உரிய காரணம் தெரிவிக்கப்படும்&rdquo; என்றார். பெயர் இடம்பெறாவிட்டால் காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். &nbsp;எஸ்.ஐ.ஆர் ஆன்லைன் சர்வர் &nbsp;சரியாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. ஒருவர் தவறான ஆவணத்தை கொடுக்கிறார் எனில், அதை பி.எல்.ஓ.க்கள்தான் கண்டு பிடிக்க முடியும். டிசம்பர் 4 வரை &nbsp;எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்கும் பணி நடைபெறும். 33,000 தன்னார் வலர்கள், 88 ஆயிரம் பி.எல்.ஓ.க் கள் எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடு பட்டுள்ளனர். 327 பி.எல்.ஓ.க்கள் தங்கள் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக நிறைவு செய்துள்ளனர் என்று கூறினார்.</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram