மக்களவை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9 விவாதம்!
15 Feb 2026, 3:03 pm
<p><strong>மக்களவை சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9 விவாதம்!</strong></p>
<p>புதுதில்லி, பிப். 15 மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மார்ச் 9-ஆம் தேதி விவாதிக்கப்படும் என ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார். சர்ச்சையின் பின்னணி 2026 பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில், முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நரவனேவின் “போர் ஸ்டார்ஸ்” புத்தகக் குறிப்புகள் குறித்துப் பேச எதிர்க்கட்சித் தலை வர் ராகுல் காந்திக்குச் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் தொடர் போராட்டத் தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் கேள்வி களுக்கு அஞ்சி பிரதமர் மோடி அவைக்கு வராத நிலையில், பிப்ரவரி 5- அன்று பிரத மரின் பதிலுரை இல்லாமலேயே குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் வராதது குறித்து விளக்கம் அளித்த சபாநாயகர், “எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்கள் தாக்க முயன்றதால்தான் பிரத மரை வரவேண்டாம் என நான் கூறினேன்” என ஒரு பொய்க் குற்றச்சாட்டைக் கூறி னார். இந்த அவதூறைக் கண்டித்தும், சபாநாயகரின் ஒருதலைப்பட்ச போக்கைக் கண்டித்தும் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணியின் 118 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் பிப்ரவரி 10- அன்று தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சரின் மிரட்டல் இதுகுறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், “மார்ச் 9-இல் தீர்மானத்தின் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெறும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 8 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். இதில் மிக முக்கியமான மசோதாக்கள் நிறைவேற்றப்படும். எதிர்க் கட்சிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டால் ‘கில்லட்டின்’ (Guillotine) முறையைப் பயன்படுத்தி விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்” என மிரட்டும் தொனியில் எச்சரித்தார். தேர்தல் கால பட்ஜெட்? தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், பட்ஜெட்டின் முதல் அமர்வில் பெரிய அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை. தற்போது இரண்டா வது அமர்வில் புதிய மசோதாக்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மூலம் ஒரு ‘தேர்தல் அறிக்கை’ போன்ற பட்ஜெட்டை மோடி அரசு வெளியிடத் திட்டமிட்டுள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சபாநாயகர் மீதான தீர்மானம் மற்றும் தேர்தல் அரசியல் நகர்வுகளால் நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு பெரும் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
