முந்தய பக்கம்

நிதீஷ் குமார் சகாப்தம் முடிந்தது; பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சர் நாளை பதவியேற்பு!

14 Apr 2026, 5:03 pm
நிதீஷ் குமார் சகாப்தம் முடிந்தது; பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சர் நாளை பதவியேற்பு!
<p>பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாஜகவின் முதல் பீகார் முதலமைச்சராக சாம்ராட் சவுத்ரி நாளை பதவியேற்க இருக்கிறார்.</p><p>பீகார் மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 10-ஆவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற நிதிஷ் குமார், கடந்த மாதம் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதாகவும் அறிவித்தார். இதை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றார். இதை தொடர்ந்து அவர் தனது முதலமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதன் மூலம் 21 ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்த நிதீஷ் குமாரின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. </p><p>மேலும், பீகாரின் புதிய முதலமைச்சராக பாஜக-வை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி நாளை பதவியேற்க இருக்கிறார்.</p><p><br></p>
Share
FacebookXWhatsAppTelegram