உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு!
24 Nov 2025, 5:31 am
<p>உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றுக்கொண்டார். <br />
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர் கவாய்-இன் பதவிக் காலம் நேற்றுடன்(நவ.23) நிறைவடைந்தது. அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் அறிவிக்கப்பட்டிருந்தார்.<br />
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதிமுர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். 2027 பிப்ரவரி 9ஆம் தேதி வரை சூர்யகாந்த் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார் <br />
<strong>நீதிபதி சூர்யகாந்தின் பணி விவரங்கள்:</strong><br />
நீதிபதி சூர்யகாந்த் ஹரியானா மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவர் 1984ஆம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். பின்னர் பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாகவும் பணியாற்றினார்.<br />
கடந்த 2004ஆம் ஆண்டு பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார். அதன்பின் 2018 இல் இமாச்சல் உயர்ந்தீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், 2019இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றார்.<br />
இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவால் உச்சந்தீதிமன்றத்தின் 53ஆவது தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார்.</p>
