ஏப்.10 முதல் சுங்கச் சாவடிகளில் புதிய நடைமுறை
8 Apr 2026, 5:30 am
<p><strong>ஏப்.10 முதல் சுங்கச் சாவடிகளில் புதிய நடைமுறை</strong></p><p>சென்னை, ஏப்.7 - தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு மிக முக்கியமான மாற்றத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் 10 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ரொக்கமாகப் பணம் செலுத்தும் முறை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.</p><p>இனி பாஸ்டேக் முறை முதன்மையானதாக இருக்கும். பாஸ்டேக் வசதி இல்லாத வாகனங்கள் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தலாம். எனினும், பாஸ்டேக் இல்லாமல் பயணிப்போர் வழக்கமான கட்டணத்தைவிட 1.25 மடங்கு கூடுதல் தொகையை அபராதமாகச் செலுத்த நேரிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>வாகனங்களுக்கு வாகன உரிமையாளர்கள் மொபை எண் மூலம் தங்களது பாஸ்டேக் கணக்கை மூன்று நாட்களுக்குள் செலுத்தத் தவறினால், வழக்கமான கட்டணத்தைவிட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
