நெஸ்லே மற்றும் கேஃப்சி நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ்!
12 Jun 2026, 5:28 pm
<p>நெஸ்லே(Nestle) மற்றும் கேஃப்சி(KFC) ஆகிய நிறுவனங்கள் மீது எழுந்துள்ள சுகாதார குறைபாடு புகார் குறித்து விளக்கம் அளிக்க உணவுப் பாதுகாப்புத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது.</p><p>உணவுப் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், முன்னணி உணவு நிறுவனங்களான நெஸ்லே மற்றும் கேஎஃப்சி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் கவனம் ஈர்த்துள்ளன. </p><p>இதையடுத்து, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) இரு நிறுவனங்களிடமும் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.</p><p>மேகி (Maggi) நூடுல்ஸ் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நெஸ்ட்லே நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதேபோல், சுகாதாரக் குறைபாடுகள் தொடர்பாக எழுந்த புகாரையடுத்து கேஎஃப்சி நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.</p><p>இந்த விவகாரம் முதலீட்டாளர்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, நெஸ்லே நிறுவனத்தின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சுமார் 3 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது.</p>
