நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் அமைச்சர்கள் சீ.ரமேஷ், பெ.மதன் ராஜா பங்கேற்பு
28 Jun 2026, 11:41 pm
<p><strong>நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் அமைச்சர்கள் சீ.ரமேஷ், பெ.மதன் ராஜா பங்கேற்பு</strong></p><p>திருநெல்வேலி, ஜுன் 28- திருநெல்வேலி நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் 520-ஆவது ஆனிப் பெருந்தேரோட்டத்தினை ஞாயிற்றுக்கிழமை அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் மற்றும் தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா ஆகியோர் வடம் பிடித்து தேர் இழுத்து தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பி னர் செ.ராபர்ட் புரூஸ் , சட்டமன்ற உறுப்பி னர்கள் ஆர்.எஸ்.முருகன் (திருநெல்வேலி), ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் (நாங்கு நேரி), டாக்டர் எஸ்.கே.கிறிஸ்டோபர் (இராதாபுரம்), மாவட்ட வருவாய் அலுவலர் மு.துரை அவர்கள் உட்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
