தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்

16 May 2026, 8:04 pm
நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்
<p><strong>நாட்டுப்புறப் பாடகியின் நாட்டு நலன்</strong></p><p>உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. உன் வேலைய மட்டும் பாரு. என் ஊரு பிரச்சனையில் எல்லாம் ஏன் தலையிடுற என்ற கேள்விகள் பலதும் எதிர்கொண்டிருப்போம். </p><p>குறிப்பாக மக்களின் பிரச்சனைகளை உணர்ந்து அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் ஒவ்வொரு நபரும் தனது குடும்பம், நண்பர்கள், சுற்றத்தார் மத்தியில் இருந்து இந்த கேள்வியை எதிர்கொள்வார்கள். </p><p>அப்படித்தான் நேஹா சிங் ரத்தோருக்கும் அவரது நண்பர்கள் கேள்வி எழுப்பினார்கள். கேள்வி மட்டுமல்ல. </p><p>நீ பெரிய ஆபத்தில் சிக்கிக்கொள்வாய், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு நடந்தது போல சுட்டுக் கொலை செய்யப்பட்டு விடுவாய் எனவும் எச்சரித்துள்ளார்கள். </p><p>அவர்கள் எச்சரித்தது போல ஒன்று ரெண்டல்ல பல நெருக்கடிகளை சந்தித்தாலும் அவற்றை தைரியமான ஏந்திக்கொண்டு ஊர் பிரச்சனைகளை கைவிடாமல் கேள்விகள் எழுப்பிகொண்டுள்ளார் நேஹா. </p><p>தற்போது கூட “மணிப்பூரைக் காப்பாற்ற முடியாத” ஒரு அரசு நிர்வாகம் எப்படி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என கேள்வினார்.</p><p> கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கவனிக்காமல், தேர்தல்களிலும் அரசியலிலும் நேரத்தைச் செலவிடும் பாஜக அரசையும் அவர் விமர்சித்துள்ளார். </p><p>போராட்டங்கள் நடத்துவதும், தேர்வுத் தாள் தகவல் கசிவுக்கு எதிராக அரசிடம் கேள்வி எழுப்புவதன் காரணமாக, மாணவர்களை “தேச விரோதிகள்” என்று முத்திரை குத்திவிடக் கூடாது. </p><p>மாணவர்கள் அச்சமின்றிப் அரசை நோக்கி கேள்வி எழுப்பிக் வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.</p><p><strong>யார் இந்த நேஹா? </strong> </p><p>பீகார் மாநிலத்தை சேர்ந்தவரான நேஹா சிங் ரத்தோர் 23 வயது இளம் பாடகி. </p><p>பீகார்-உத்தரப்பிரதேச எல்லையில் உள்ள ஜந்தாஹா என்ற சிறிய கிராமத்தில் வசிக்கும் நேஹா கான்பூரில் பி.எஸ்சி முடித்தார். </p><p>2019-இல் இருந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி வரும் இவர் கொரோனா காலத்தில் யூடியூயூபில் ‘தரோஹர்’ (Dharohar) என்ற சேனல் துவங்கி பாடல்களை வெளியிடத் துவங்கினார். </p><p>ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை விமர்சித்து இவர் பாடும் போஜ்புரி நாட்டுப்புறப் பாடல்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. </p><p> 2023 ஆம் ஆண்டு பாஜக ஆர்எஸ்எஸ் தொடர்புடைய பிரவேஷ் சுக்லா என்பவன் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் மீது சிறுநீர் கழித்து கொடுமை செய்தது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சிக்கும் கார்ட்டூன் ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்து நேஹா விமர்சித்தார். </p><p>இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. </p><p>அதேபோல பஹல்காம் தாக்குதலுக்கு காரணம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் உளவு மற்றும் பாதுகாப்புத் துறையின் தோல்வி தான் கூறியிருந்த காணொலி ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். </p><p> ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இஸ்லாமியர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. அ</p><p>வ்வாறு 2023 ஆம் ஆண்டு கான்பூர் தேஹத் மாவட்டத்தில் வீடுகள் இடிக்கப்பட்ட போது இரண்டு பெண்கள் தீக்குளித்தனர். </p><p>இந்த சம்பவத்தைக் குறிப்பிட்டும் ஆதித்யநாத்தைவிமர்சித்தும் நாட்டுப்புறப் பாடலைப் பாடி ரத்தோர் பகிர்ந்திருந்தார். </p><p>இதனைக்கண்டு ஆத்திரமடைந்த அரசு அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. </p><p>ஆனால் எந்த ஒரு பொய் வழக்காலும், மிரட்டல்களாலும் நேஹா சிங்கின் போராட்டக்குரலை ஒடுக்க முடியவில்லை. </p><p>இதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, “அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும் உரிமையை நமது ஜனநாயகம் நமக்கு வழங்குகிறது. </p><p>நான் அதையே செய்கிறேன்” என நேஹா சொல்கிறார்<strong> </strong></p><p><strong>பாடல்களில் வெளிப்படும் கிளர்ச்சி</strong></p><p> நேஹா சிங் ரத்தோரின் மக்கள் பிரச்சனைகள் பற்றிய பாடல்களின் ஒவ்வொரு வரிகளிலும் கிராமத்துக் காற்றும், கிளர்ச்சியும் பிணைந்து இருக்கின்றன. </p><p>“வேலை தருவீர்களா அல்லது நாடகமாடுவீர்களா? இந்த அதிகார நாற்காலி ஒன்றும் உங்கள் அப்பாவிடம் இருந்து உங்களுக்கு வந்த சொத்து அல்ல” என வேலையின்மைக்கு எதிராக அவர் அதிகாரத்தில் உள்ளவர்களைச் கடுமையாகச் சாடி பாடல் ஒன்றை பாடியுள்ளார். </p><p>“அவர்கள் நல்ல காலம் வரும் என்றார்கள், ஆனால் இப்போது நம் கையில் பிச்சை பாத்திரத்தைத் தான் கொடுத்துள்ளார்கள்” என்று பாஜக அரசின் அச்சே தின் (நல்ல காலம் வரும்) என்ற வாக்குறுதியைக் கேலி செய்து ஒரு பாடல் பாடியுள்ளார். </p><p>கடந்த பல ஆண்டுகளாக கேவலமான அரசியல் நகர்வுகள் மூலம் நிதிஷ் குமார் முதல்வர் பதவியில் நீடித்திருந்தார். </p><p>அம்மாநில மக்கள் கடும் வறுமையில் உள்ளனர். ஆனாலும் நல்ல ஆட்சியை நான் கொடுத்துள்ளேன் என அவர் பேசியதை கடுமையாக விமர்சித்தும் வேலையில்லாததால் பீகார் மக்கள் புலம்பெயர்ந்து வேலை தேடி வளைகுடா நாடுகளுக்குச் செல்வதையும் சுட்டிக்காட்டி பாடல்கள் பாடினார். </p><p> அதேபோல், ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் குறிப்பிட்டு, இது தான நீங்கள் சொன்ன ராமராஜ்ஜியமா என யோகி அரசை கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் பாடியுள்ளார். </p><p> இப்படி பாஜக ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும் இவரை பாஜக வினர் ‘தேச விரோதி’ ‘துரோகி’ என்றும் சமூக ஊடகங்களில் வசைபாடுகின்றனர். </p><p>பலர் மிரட்டல்களையும் விடுத்துள்ளனர். துவக்கத்தில் இந்த மிரட்டல்களை கண்டு பயந்த குடும்பத்தினர், தற்போது போராட்டக்குரலுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இசை ரீதியாக எந்தப் பயிற்சியும் பெறாத ரத்தோர், தனது தாயையே தனது முன்மாதிரியாகக் கருதுகிறார். </p><p>போஜ்புரி இசையில் மலிவான மற்றும் ஆபாசமான கருத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், அதன் பெருமையை மீட்டெடுக்க இவர் விரும்புகிறார். சுமார் 5.1 கோடி மக்கள் பேசும் போஜ்புரி மொழியின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதே தனது லட்சியம் என ரத்தோர் கூறுகிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.