அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிப்பதில் அலட்சியம்
16 Mar 2026, 4:46 pm
<p><strong>அரசியல் கட்சிகளின் சின்னங்கள் அழிப்பதில் அலட்சியம்</strong></p>
<p>அவிநாசி, மார்ச் 16- தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ள நிலையில், அவிநாசியில் பல இடங்களில் அரசியல் கட்சிகளின் சின்னங் கள் முழுமையாக அழிக்கப்பாமல் உள்ளது. நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியத்துடன் செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மார்ச் 15 இரவு முதல் நடத்தை விதிகள் அமுலாகியுள்ளது. இதைதொடர்ந்து பொது இடங்களில் அரசியல் கட்சியின் சின்னங்கள், தலைவர்க ளின் சிலைகள் உள்ளிட்டவைகள் மறைக்கப்படும். இந்நிலை யில் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளின் சின்னங்கள் முழுமையாக அழிக்கப்ப டாமல் உள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அவிநாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி நெடுஞ் சாலைத் துறை பொறியாளர் தரணிதரனிடம் புகார் தெரி வித்தும், நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக செயல்படு கிறது. குறிப்பாக அவிநாசி தேசிய நெடுஞ்சாலை கால்நடை மருத்துவமனை அருகில் பாலத்தில் வரையப்பட்ட விசில் சின்னம் சரிவர அழிக்காமல், பெயரளவில் மட்டும் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. அதேபோல மங்கலம் சாலை பைபாஸ் பாலத்தின் இரண்டு புறங்களிலும் விசில் சின்னம் வரையப்பட்டு அளிக்கப்படாமல் உள்ளது. பைபாஸ் சாலை யிலிருந்து ரவுண்டானா பகுதி பாலத்தில் விசில் சின்னம் வரையப்பட்டுள்ளது. ராயன் கோவில் செல்லும் நுழைவாயில் அருகே இருபுற சுவர்களிலும் இரட்டை இலை சின்னம் வரை யப்பட்டுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் தற்போது வரை சின்னங்கள் அழிக்கப்படாமல் உள்ளன. அதேபோல் தனி யாருக்கு சொந்தமான இடங்களில் தேர்தல் ஆணையத்தில் அனுமதி கடிதம் ஒப்படைத்த பிறகே சின்னம் வரைய வேண்டும் என்ற நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளதா ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கேள்வி எழுப்பியுள் ளனர்.</p>
