முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 May 2026, 8:43 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்
<p><strong>ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா</strong></p><p>பணம் கறக்கும் இயந்திரமாகவும், மிகப்பெரிய ஊழலாகவும் நீட் தேர்வு மாறிவிட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான கூட்டுச் சதியை உச்சநீதிமன்றம் தான் அம்பலப்படுத்த வேண்டும்.</p><p><strong>ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்</strong></p><p>வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் மீண்டும் ஒருமுறை விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது. பீகாரிலும், நாடு முழுவதிலும் தொடரும் இந்த வினாத்தாள் கசிவுச் சங்கிலி முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.</p><p><strong>தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோஹித்</strong></p><p>நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் பின்னணி நாசிக் வரை நீண்டுள்ளதால், மகாராஷ்டிரா மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொள்கிறது. இந்த நீட் ஊழலால் நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2.25 லட்சம் மாணவர்களும் அடங்குவர். </p><p><strong>ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்</strong></p><p>ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு தொடர்பாக கலக்கமான நிகழ்வுகள் அரங்கேறுகிறது. இம்முறை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெருமளவில் வீதியில் இறங்கி போராட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு போராட்டங்களின் மொழி மட்டுமே புரியும் என்ற சூழல் உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram