தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாமக்கல் முட்டை விலை வீழ்ச்சி

17 Jan 2026, 2:42 pm
நாமக்கல் முட்டை விலை வீழ்ச்சி
<p><strong>நாமக்கல் முட்டை விலை வீழ்ச்சி</strong></p> <p>நாமக்கல், ஜன. 17- கடந்த மாதம் நாமக்கல் முட்டை விலை உச்சத்தில் இருந்த நிலையில், தற்போது படிப்படியாக முட்டை யின் விலை வீழ்ச்சியடைந்து வருகி றது. இது முட்டை பிரியர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. தென்னிந்தியாவின் &lsquo;முட்டை &nbsp;நகரம்&rsquo; என்று அழைக்கப்படும் நாமக் கல் மாவட்டம், முட்டை உற்பத்தியில் உலகளவில் புகழ் பெற்றது. இங் குள்ள ஆயிரக்கணக்கான கோழிப் ப்பண்ணைகள் மூலம் நாளொன் றுக்கு சுமார் 4 முதல் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் நாள்தோறும் சுமார் 80 லட்சம் &nbsp;முட்டைகள் வெளி மாவட்டங்களுக் கும், கேரளம் உள்ளிட்ட அண்டை &nbsp;மாநிலங்களுக்கும், வெளிநாடுக ளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரு கின்றன. கடந்த டிசம்பர் மாதத்தில் கடும் &nbsp;குளிர் மற்றும் நுகர்வு அதிகரிப்பு கார ணமாக முட்டை விலை முன்னெப் போதும் இல்லாத வகையில் புதிய &nbsp;உச்சத்தைத் தொட்டது. ஒரு முட்டை யின் பண்ணைக் கொள்முதல் விலை &nbsp;ரூ. 6.80 காசுகள் வரை உயர்ந்தது. &nbsp;இந்த விலை உயர்வு முட்டை சார்ந்த &nbsp;உணவு விடுதி உரிமையாளர்கள் மற் றும் சாமானிய மக்களிடையே பெரும் &nbsp;அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஜனவரி முதல் &nbsp;வாரத்தில் முட்டை விலை கணிசமா கக் குறையத் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக ரூ. 6.60 ஆக &nbsp;இருந்த விலை, தற்போது மேலும் &nbsp;சரிவடைந்துள்ளது. நாமக்கல்லில் &nbsp;தேசிய முட்டை ஒருங்கிணைப் புக்குழு (NECC) மண்டலத் தலைவர் பொன்னி சிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் தில், முட்டை விலையை ஒரே நாளில் &nbsp;30 பைசா குறைக்க முடிவெடுக்கப்பட் டது. இதன் மூலம் பண்ணைக் கொள் முதல் விலை ரூ. 5.30 ஆக நிர்ணயிக் கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் விலை வீழ்ச்சி &nbsp;பற்றி &nbsp;முட்டை வியாபாரிகள் கூறுகையில், பொங்கல் பண்டிகையை ஒட்டி மக் கள் சைவ உணவிற்கு மாறுவதால் முட்டை நுகர்வு குறைந்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களின் மாலை &nbsp;அணிவிக்கும் காலம் என்பதால் முட் டைக்கான தேவை சரிந்துள்ளது என்றனர். முட்டை விலை சரிவடைந்துள்ள தால், கேக் தயாரிப்பாளர்கள், துரித உணவு கடை உரிமையாளர்கள் மற் றும் முட்டை பிரியர்கள் நிம்மதி &nbsp;அடைந்துள்ளனர். இருப்பினும், கோழித் தீவன விலை உயர்ந்து &nbsp;வரும் சூழலில், கொள்முதல் விலை &nbsp;குறைவது பண்ணையாளர்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்ப டுத்தும் என்ற கவலையும் எழுந்துள் ளது. வரும் நாட்களில் தேவை அதி கரிப்பைப் பொறுத்தே விலையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.