நாமக்கல் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
5 Apr 2026, 5:18 pm
<p><strong>நாமக்கல் திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு</strong></p>
<p>நாமக்கல், ஏப்.5- “சாதனைகள் தொடர; மக்கள் நலனில் அக்கறையோடு செயல் படும் திமுக அரசை மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும்” என வலியு றுத்தி நாமக்கல் திமுக வேட்பாளர் ராணி பொதுமக்களிடம் ஆதரவு கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல் ஒன்றியம் சிங்கிலிபட்டி பகு தியில் திமுக வேட்பாளர் ராணி தலை மையில் வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சி சனியன்று நடை பெற்றது. பிரச்சாரத்தின் போது, திமுக அர சின் பல்வேறு நலத்திட்டங்கள், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொது மக்களுக்கு விரிவாக எடுத்துரைக் கப்பட்டது. “சாதனைகள் தொடர வேண்டும்; மக்கள் நலனில் செயல் படும் அரசை மீண்டும் ஆதரிக்க வேண்டும்” என வலியுறுத்தி, பொது மக்களிடம் ஆதரவு கோரப்பட்டது. வீடு தோறும் சென்று பெண்கள், முதியோர், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களையும் நேரடி யாக சந்தித்து, அவர்களின் தேவை கள் மற்றும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். இதனால், பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது. இந்நிகழ்வில், நாமக்கல் திமுக ஒன்றிய கழக செயலாளர் வி.கே. பழனிவேல் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகி கள் திரளானோர் பங்கேற்றனர்.</p>
