தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!

28 May 2026, 10:03 pm
ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!
<p><strong>ஓட்டை உடைசல் பேருந்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக! நாகர்கோவில் பணிமனையில் ‘கூண்டு கட்டும் பிரிவை’ மீண்டும் இயக்குக!</strong></p><p>கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நாகர் கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழகத்தில், கடந்த காலங்களில் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு வந்த கூண்டு கட்டும் பிரிவை (Body Building Unit) மீண்டும் செயல்பட வைக்க வேண்டியது காலத்தின் கட்டாய மாகும். </p><p>தமிழக அரசு உடனடியாக இப்பிரிவை மீண்டும் செயல்படுத்து வதன் வழியாக, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 250 தொழில்நுட்பப் பணி யாளர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்; தற்போதைய ஓட்டை உடைசல் பேருந்துகளின் அவல நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். </p><p>வரலாற்றுப் பின்னணியும் தற்போதைய நிலையும் நாகர்கோவில் மண்டல அரசுப் போக்குவரத்துக்கழகம் நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டது. </p><p>கடந்த 1974-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, ‘கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம்’ என இது செயல்பட்டு வந்தது. </p><p>பின்னர் 1983-ஆம் ஆண்டு ‘நேசமணி போக்குவரத்துக் கழகம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, 2004 முதல் தற்போதைய அமைப்பில் திருநெல்வேலி கோட்டத் தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. </p><p>இம்மண்டலத்தின் கீழ் நாகர்கோ வில் ராணித்தோட்டம்-1, 2, 3, விவேகானந்தபுரம், கன்னியாகுமரி, குளச்சல், திங்கள்சந்தை, செட்டி குளம், குழித்துறை-1, 2, திருவட்டார் என மொத்தம் 12 பணிமனைகள் மிகப்பரந்த அளவில் செயல்பட்டு வருகின்றன.</p><p> இந்த மண்டலத்தில் 1,856 ஓட்டுநர்களும், 292 தொ ழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களும் இரவு பகலாக உழைத்து வருகிறோம். </p><p>காலிப்பணியிடங்களும் அதிகரித்துவரும் பணிச்சுமையும் இத்தனை பணிமனைகள் சிறப்பாக இயங்கினாலும், தற்போது நிலவி வரும் கடுமையான காலிப் பணியிடங்கள் தொழிலாளர்களைக் கடும் அவதிக்குள்ளாக்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி ஓட்டுநர் பணியிடங்கள்-60, நடத்துநர் பணியிடங்கள்-341, தொழில்நுட்பப் பணியிடங்கள்-128 மற்றும் அலுவலகப் பணியிடங்கள்-51 எனப் பெருமளவிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன. </p><p>இதனால் நிலவி வரும் கடும் பணிச்சுமை, தொழிலாளர்க ளின் அன்றாடப் பணியைப் பெரிதும் பாதித்துள்ளது.</p><p> உலகப் புகழ்பெற்ற நமது ‘பாடி பில்டிங்’ பெருமை கன்னியாகுமரி மாவட்டத்தில் 452 நகரப் பேருந்துகள் மற்றும் ஏரா ளமான புறநகர்ப் பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு, பல்லாயிரக் கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.</p><p> அண்டை மாநிலமான கேரளாவிற்கும் இங்கிருந்து அதிகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.</p><p> இத்தனை சிறப்புகள் வாய்ந்த நமது பணிமனைதான், ஒரு காலத்தில் பேருந்துகளுக்குக் கூண்டு கட்டுவதில் ஒட்டுமொத்தத் தமிழகத்திலேயே முதலிடம் வகித்தது என்பது இன்று பலரும் அறியாத உண்மை.</p><p> நமது மாவட்டத்தில் கிடைக்கும் மிகத் தரமான மரங்கள் மற்றும் நமது ஊழியர்களின் தேர்ந்த தொ ழில்நுட்பக் கைவண்ணத்தால்தான் இங்கு கட்டப்பட்ட கூண்டுகள் மிகத் தரம் வாய்ந்தவையாக அமைந்தன. </p><p>ஒரு காலத்தில் இலங்கை அரசு, கேரளா அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் கூடத் தங்க ளின் புதிய ‘சேசிஸ்’களை (Chassis) நாகர்கோவிலுக்குக் கொண்டு வந்து கூண்டு கட்டி எடுத்துச் சென்ற வரலாறு உண்டு.</p><p> நிறுத்தப்பட்ட பிரிவும் கரூர் நிறுவனங்களின் ஆதிக்கமும் கடந்த 1962-இல் காமராஜர் முதலமைச்சராகவும், ஆர். வெங்கட் ராமன் போக்குவரத்து அமைச்சராக வும் இருந்தபோது இந்தத் கூண்டு கட்டும் பிரிவு மிக கம்பீரமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. </p><p>ராணித் தோட்டம் பணிமனை மற்றும் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழகப் பணிமனை களில் இப்பணி மிகச்சிறப்பாக நடை பெற்றது. </p><p>ஆனால், 1990-களுக்குப் பிறகு புகுத்தப்பட்ட ஒப்பந்த (Contract) முறையினாலும், ஆட்சியாளர்களின் அலட்சியத்தினாலும் இப்பிரிவு மூடப்பட்டு, இங்கிருந்த எந்திரங்களும் அப்புறப்படுத்தப்பட்டன. </p><p>இதனால் ஏராளமான தொழிலாளர்கள் தங்க ளின் வாழ்வாதாரத்தை இழந்தனர். </p><p>தற்போது புதிய சேசிஸ்கள் அனைத்தும் கரூர் போன்ற பிற மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கூண்டு கட்டப்பட்டு மீண்டும் இங்குக் கொண்டு வரப்படுகிறது. </p><p>சமீபகாலமாகப் புதிய பேருந்துகள் ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ள தால், பழைய பேருந்துகளின் சேசிஸ்களையே (Chassis) கொண்டு மீண்டும் மீண்டும் பாடி கட்டி, ஆபத்தான முறையிலேயே பயணி கள் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.</p><p> தனியார் கூண்டுகளின் தரம் குறைவும் கூடுதல் நிதிச்சுமையும் நமது கூண்டு கட்டும் பிரிவு செயல்பட்ட போது, பேருந்துகள் ஓட்டை உடைசல்கள் இன்றி, மலைப் பிரதேசம் மற்றும் கடற்கரைப் பகுதி களில் இயக்க ஏதுவாகத் தரமாக இருந்தன. </p><p>காற்றோட்டம், டீசல் சிக்கனம், விபத்துக் குறைவு மற்றும் தொழிலாளர்களின் பணிச்சூழலுக்கு உகந்ததாக அவை அமைந்தன. </p><p>ஆனால், இப்போது கரூரில் தனி யார் நிறுவனங்கள் மூலம் கூண்டு கட்டி வரப்படும் பேருந்துகள் அந்த ளவிற்குத் தரமாக இருப்பதில்லை. </p><p>முன்பு நமது பணிமனையில் வெளி யூரிலிருந்து வரும் கம்பி, பைப் போன்றவற்றின் தரம் குறைவாக இருந்தால், அவற்றை ஊழியர்கள் திருப்பி அனுப்பிய துணிச்சலான அதிகாரமிருந்தது; இன்று தனி யார்மயத்தால் அந்தத் தரம் முற்றி லும் சீரழிந்துவிட்டது. </p><p>மேலும், கரூரில் கூண்டு கட்ட ஒரு பேருந்துக்கு 8 லட்சம் ரூபாய் வரை அரசு செலுத்த வேண்டியுள்ளது</p><p>. நாகர்கோவிலில் கட்டியபோது 6 லட்சம் ரூபாய் மட்டுமே செலவானது.</p><p> இதன் மூலம் ஒவ்வொரு பேருந்துக்கும் 2 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலுத்த வேண்டிய நிதிச்சுமை அரசுக்கு ஏற்படுகிறது. </p><p>உரிமைக் குரல்! இழந்த தொழில்நுட்பத்தை மீண்டும் புகுத்தி, நாகர்கோவில் மண்டலப் போக்குவரத்துக்கழகப் பணிமனையில் கூண்டு கட்டும் பிரிவை மீண்டும் தொடங்கினால், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 250 தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு உறுதியாகக் கிடைக்கும். </p><p>அரசுக்கும் பேருந்து ஒன்றுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வரை மக்கள் பணம் மிச்சமாகும். </p><p>எனவே, சாமானிய மக்கள் பாது காப்பாகப் பயணம் செய்யவும், தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்தவும், நிலு வையில் உள்ள காலிப்பணியிடங்க ளை உடனடியாக நிரப்பவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.