நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
7 Mar 2026, 2:36 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீழையூர் ஒன்றியம் காமேஸ்வரம் ஊராட்சி, ஆலமரத்தடியில் மூன்று லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிழலகத்தை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி வெள்ளியன்று திறந்து வைத்தார். கீழையூர் திமுக ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், வேளாங்கண்ணி பேரூராட்சி திமுக செயலாளர் சார்லஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் மற்றும் ஜெபஸ்டி அம்மாள், ஒன்றிய பொருளாளர் கவிதாராணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
