நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட
1 Dec 2025, 5:20 pm
<p>நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி பார்வையிட்டார். கீழையூர் ஊராட்சி ஒன்றியம், விழுந்தமாவடி ஊராட்சி, தம்பிரான் குடியிருப்பில் மரம் விழுந்து சேதமடைந்த வீடுகளை, பார்வையிட்ட அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.</p>
<p>நாகப்பட்டினம் மாவட்டத்தில் கருங்கண்ணி ஊராட்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை ஐஏஎஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தேசிய பேரிடர் மீட்பு குழு தலைவர் ஆகியோருடன் வி.பி.நாகைமாலி பார்வையிட்டார்.</p>
