சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்
15 Jul 2026, 11:01 pm
<p>சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யா-வின் 106 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தருமபுரி செங்கொடிபுரத்தில் புதனன்று நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுனன், நகரச் செயலா ளர் ஏ.ஜெயா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், எம்.அருள்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ஏ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
