புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!
8 Apr 2026, 5:30 am
<p><strong>புது ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டினார் என். பாண்டி!</strong></p><p>பழனி, ஏப். 7 - மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் பழனி தொகுதியில் போட்டியிடும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் தோழர் என். பாண்டி, புது ஆயக்குடி ஜமாத் மஸ்ஜிதின் முத்தவல்லி, செயலாளர் மற்றும் ஆயக்குடி ஜமாத் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார்.</p><p>இந்தச் சந்திப்பின் போது, "பாஜகவின் மதவாத அரசியலால் இந்தியா முழுவதும் சிறுபான்மை மக்கள், மோசமான பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மதவெறி அரசியலுக்கு எதிராக இடதுசாரிகளும், திமுக உள்ளிட்ட கட்சிகளும் மட்டும் தான், உறுதியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.</p><p>எனவே, தமிழகத்தின் அமைதி, நல்லிணக்கம் பாதுகாக்கவும், பாஜக - அதிமுக கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மக்கள் அனைவரும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்று என். பாண்டி கேட்டுக் கொண்டார்.</p>
