தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு

13 May 2026, 9:33 pm
நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
<p><strong>நாளை முல்லைப்பெரியாறு அணையில் துணைக் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு </strong></p><p>தேனி, மே 13- தேசிய அணைகள் பாதுகாப்பு மண்டல இயக்குநர் கிரி தரன் தலைமையிலான துணைக் கண்காணிப்பு குழுவினர், மே 15ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முல்லைப்பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். </p><p>தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையில் மேற்பார்வைக் குழு செயல்பட்டு வருகிறது. </p><p>இந்த குழுவிற்கு உதவி யாக முல்லைப்பெரியாறு அணைக்கென தனி துணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. </p><p>அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென் மண்டல இயக்குநர் கிரிதரன் தலைமையிலான இந்த குழுவில், தமிழக அரசின் சார்பில் பெரியாறு–வைகை வடிநிலக் கோட்டம் மதுரை கண்காணிப்பு பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்டம் கம்பம் செயற்பொறியாளர் செல்வம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.</p><p> கேரள அரசின் சார்பில் எர்ணாகுளம் மத்திய வட்ட நீர்ப்பாசன பிரிவு கண்காணிப்பு பொறியாளர் கோஷி மற்றும் கட்டப்பனை நீர்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர் லெவின்ஸ் பாபு ஆகியோரும் குழுவில் உள்ளனர். </p><p>இந்த துணைக் குழுவினர் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி அணையில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். </p><p>இந்நிலையில், மே 14ஆம் தேதி (வியாழக்கிழமை) முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியாக உள்ள முல்லைக்கொடி மழைப்பொழிவு நிலையத்தை குழுவினர் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர். </p><p>தொடர்ந்து, மே 15ஆம் தேதி பெரியாறு அணையில் ஆய்வு நடைபெற உள்ளது. ஆய்வின் போது பிரதான அணை, பேபி டேம், மண் அணை, அணை நீர்வரத்து, நீர் கசிவு, மதகுகளின் செயல்பாடு மற்றும் கேலரி பகுதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன. </p><p>இதனைத் தொடர்ந்து, அதே நாள் மாலை குமுளி யில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆலோ சனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. </p><p>இந்த கூட்டத்தில், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் மற்றும் வள்ளக்கடவு முதல் பெரியாறு அணை வரை உள்ள வாகனப் பாதையை சீரமைக்கும் பணிகள் குறித்து தமிழக அதிகாரிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.