மைனாரிட்டி அரசாங்கம் நடத்த சட்டத்தில் இடமுண்டு! முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து
9 May 2026, 10:48 pm
<p><strong>மைனாரிட்டி அரசாங்கம் நடத்த சட்டத்தில் இடமுண்டு! முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து</strong></p><p>சென்னை, மே 9 - தமிழக வெற்றிக் கழ கத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் முதல் நாளி லேயேஅழைத் திருக்க வேண்டும் என்று இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி கருத்து தெரிவித்துள்ளார். </p><p>“பெரும்பான்மையை விட பத்து இடங்கள் குறைவாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல. </p><p>அரசியலமைப்பு மரபு களின்படி மிகப்பெரிய கட்சியின் தலைவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்பது நிலைநிறுத்தப்பட்ட சட்டமாகும். </p><p>அவர் ஆதரவைத் திரட்டி ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் நிலையான அரசாங்கத்தை அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும். </p><p>இது தான் நடைமுறை, கடந்த காலத்திலும் இவ் வாறே நடந்தது” என்று அவர் கூறியுள்ளார். </p><p>நரசிம்ம ராவ் தலைமையிலான ஒன்றிய அரசை உதாரணமாக சுட்டிக் காட்டிய ரோத்கி, “மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் வாக்களிக் காமல் இருந்தால், சிறுபான்மை அரசாங்க மும் நீண்ட காலம் செயல்பட முடியும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.</p><p> சட்ட மன்றத்தின் பணியை, ஆளுநர் தானே ஏற்று 118 எம்எல்ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தைக் கோருவது அரசியலமைப்பிற்கு எதிரானது. </p><p>பெரும் தேர்தலுக்குப் பிறகு மறுதேர்தல் அல்லது ஆளுநர் ஆட்சி என்பது எந்த தரப்பும் விரும்பாத விளைவு” என்றும் எச்சரித்துள்ளார். </p><p>தவெக உச்சநீதிமன்றத்தை நாடுவதற் கான வாய்ப்பு திறந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p><p><br></p>
