முந்தய பக்கம்

இளைய தலைமுறைக்கு பண்பாட்டைக் கொண்டு சேர்ப்பது எழுத்தாளர் கடமை

20 Dec 2025, 3:38 pm
இளைய தலைமுறைக்கு பண்பாட்டைக்  கொண்டு சேர்ப்பது எழுத்தாளர் கடமை
<p>புதுச்சேரி, டிச.20- &nbsp;முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி நகரக்குழு சார்பில் &ldquo;பண்பாட்டுக் கலந்துரையாடல்&rdquo; நிகழ்ச்சி லாஸ்பேட்டை விளிம்புநிலை வாழ்வாதார மையத்தில் நடைபெற்றது. &nbsp;நிகழ்விற்குத் தலைவர் ஹேமாவதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாள ராகப் பங்கேற்ற முனைவர் பக்தவச்சலபாரதி பேசுகையில், &ldquo;சமூக அவலங்களை எடுத்துரைப்பது போலவே, பண்பாடுகள் குறித்து இளம் தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் எழுத்தாளர்களின் முக்கியப் பொறுப்பாகும்&rdquo; என்றார். &nbsp;முன்னதாக நிகழ்ச்சியில் முஎகச வின் புதுச்சேரி தலைவர் தவில் விநாயகம், பாவலர் சண்முகசுந்தரம், நகரக் குழு செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் ரமேஷ்பைரவி, அண்ணாஜெகன், &nbsp;புதுவை பிரபா, கணேச சுப்ரமணியம் உள்ளிட்ட திரளான எழுத்தாளர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram