இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்
13 May 2026, 9:40 pm
<p><strong>இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 6 பேரை விடுவிக்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கடிதம்</strong></p><p>திண்டுக்கல், மே 13- இலங்கை கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 6 பேரையும் உடனடி யாக விடுவிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என திண் டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம் எம்.பி. ஒன்றிய அரசை வலி யுறுத்தியுள்ளார். </p><p>எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். </p><p>மன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. </p><p>கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீர் கொழும்பு அதிகாரிகளிடம் ஒப்படைக் கப்பட்டு, பின்னர் கொழும்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திண்டுக்கல் மக்க ளவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். </p><p>அந்தக் கடிதத்தில், மண்டபத்தைச் சேர்ந்த அலெக்ஸ், அந்தோணிராஜன், ஆல்பிரட், அலெக்ஸ், அருள்பிரட்டோ மற்றும் ஷானு ஆகிய 6 மீனவர்கள் படகு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக கட்டுப்பாட்டை இழந்து இந்திய கடல் எல்லையை தாண்டிச் சென்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது. </p><p>மேலும், எந்தவித விசாரணையும் இன்றி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், ஒன்றிய அரசு உடனடியாக தலை யிட்டு மீனவர்கள் 6 பேரையும் பாது காப்பாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
