ம.பி: மெட்ரோ ரயில்களில் திருமண கொண்டாட்டங்களுக்கு அனுமதி!
7 May 2026, 6:45 pm
<p>மத்தியப் பிரதேசத்தில் மெட்ரோ ரயில்களில் திருமண கொண்டாட்டங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு அனுமதி அளித்துள்ளது அம்மாநில அரசு.</p><p>மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால், இந்தூர் மெட்ரோ ரயில்களில் டிக்கெட் வருவாய் இல்லாததால், அந்த ரயில்களில் 50 பேர் மட்டும் பங்கேற்கக்கூடிய பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.</p><p>நிறுத்தப்பட்டிருக்கும் ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.5000மும், ஓடும் ரயிலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.7000மும் நிகழ்வு கட்டணமாக வசூலிக்கவும், முன்பதிவு செய்ய ஒரு பெட்டிக்கு பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.20,000 வசூலிக்கவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. </p><p><br></p>
