முந்தய பக்கம்

தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது!

27 May 2026, 8:48 pm
தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது!
<p><strong>தந்தை தீர்ப்பு தருகிறார்... மகனுக்குப் பதவி கிடைக்கிறது! </strong></p><p>மத்தியப் பிரதேசத்தின் ‘தர்’ பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மசூதியை “போஜ்சாலா சரஸ்வதி கோவில்” என்று தீர்ப்பளித்து, 1991 வழி பாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது அம்மாநில உயர்நீதிமன்ற அமர்வு. </p><p>இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி விஜய் குமார் சுக்லாவின் மகன் சுஜய் சுக்லா, தீர்ப்பு வந்த அதே நாளில் அரசு வழக்கறிஞர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்! </p><p>மேலும், மசூதிக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்த தொல்லியல் துறை வழக்கறி ஞர் சுனில் ஜெயினின் உதவியாள ராக இருந்தவர்தான் இந்த சுஜய் சுக்லா. </p><p>மகன் வேலை செய்த தரப்பு அறிக்கை கொடுக்கிறது, அதை வைத்து அப்பா தீர்ப்பு எழு துகிறார், மாலையில் மகனுக்கு அரசுப் பதவி கிடைக்கிறது! </p><p>ஆர்.எஸ்.எஸ் வழி ஆட்சி யில் நீதித்துறை எப்படி வளைக்கப்படுகிறது என்ப தற்கும், அதற்கு வளைந்து கொடுப்பவர்கள் எப்படிப் பலன் பெறுகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த ‘ஜனநாயக’ உதாரணம் தேவையில்லை.</p>
Share
FacebookXWhatsAppTelegram