ஈரானின் புதிய உச்சத்தலைவராக மொஜ்தபா காமனெயி தேர்வு!
9 Mar 2026, 6:40 am
<p>ஈரானின் உச்சத்தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி, அடுத்த உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.<br />
2026 பிப்ரவரி 28 அன்று தெஹ்ரானில் நடந்த அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டு விமானத் தாக்குதலில், ஈரானின் இரண்டாவது உச்சத்தலைவராக இருந்த ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டார்.<br />
அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 8 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பில், அலி காமனெயியின் மகனான மொஜ்தபா காமனெயி (56) ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். <br />
இந்த முடிவை ஈரானின் முக்கிய மதத் தலைவர்கள் அடங்கிய “அசெம்ப்ளி ஆஃப் எக்ஸ்பெர்ட்ஸ்” (Assembly of Experts) அறிவித்துள்ளது. அரசு ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையில், “தீர்மானமான வாக்கெடுப்பின் மூலம்” மொஜ்தபா காமனெயி தேர்வு செய்யப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.<br />
<strong>காமனெயியின் பின்னணி:</strong><br />
56 வயதான மொஜ்தபா காமனெயி1969 ஆம் ஆண்டு ஈரானின் மஷ்ஹத் நகரில் பிறந்தவர், கோம் நகரில் மதப் பயிற்சி பெற்றவர். ஈரான் - ஈராக் இறுதிகட்ட போரில் பங்கேற்றுள்ளார்.<br />
அவர் எந்தத் தேர்தல் பதவியையும் வகிக்கவில்லை. ஆனால் தனது தந்தையின் அலுவலகத்தில் முக்கிய அரசியல் அணுகலை கட்டுப்படுத்தும் வட்டாரத்தில் இருந்ததாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.<br />
அவர் பாதுகாப்பு அமைப்புகளுடனும்( Islamic Revolutionary Guard Corps )நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.<br />
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 11 ஆம் தேதிவரையில் அவகாசம் நீட்டிப்பு<br />
</p>
