தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?

24 May 2026, 8:36 pm
உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?
<p><strong>உணவுப் பொருட்களின் விலையையும் உயர்த்த மோடி அரசு திட்டமா?</strong></p><p>புதுதில்லி மே 22 அன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. </p><p>இந்த கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் அனை வரும் பங்கேற்றனர். </p><p>மேற்கு ஆசிய நெருக்கடி தொடர்பாக உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக கூறப் படுகிறது. </p><p>வழக்கமாக ஒன்றிய அமைச்ச ரவை கூட்டம் என்றால் பக்கோடா, சாண்ட்விட்ச், தேநீர், காபி, பிஸ்கட் என பல சிற்றுண்டிகளை மோடி சாப்பிட தருவர் என்றும், ஆனால் இந்த கூட்டத்தில் தேநீரைத் தவிர எதுவுமே தரவில்லை என்று கூறப் படுகிறது.</p><p> மேற்கு ஆசிய நெருக் கடி காரணமாக சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டும் என பிர தமர் கேட்டுக் கொண்டதால், இந்த ஏற்பாடு என ஒன்றிய அமைச்ச ரவை வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன. </p><p>பதற்றம் ஆனால் இந்நிகழ்வு நாட்டு மக்களுக்கு பதற்றத்தை ஏற் படுத்தியுள்ளது.</p><p> காரணம் 5 மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்த உடன் பெட்ரோல், டீசல், எரி வாயு விலையை பிரதமர் மோடி உயர்த்துவார் என எதிர்க்கட்சி கள் குற்றம்சாட்டின. </p><p>எதிர்க்கட்சி களிடம் இருந்து தப்பிக்க அத்தியா வசியப் பொருட்களின் உயர்த்த சிக்கனம் என்ற நாடகத்தை ஆரம் பித்தார். </p><p>பெட்ரோல், டீசல் சிக்க னம் என்ற பெயரில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைத்தார். </p><p>பெட்ரோல், டீசல் விலை குறுகிய காலத்தில் 3 முறை உயர்ந்தது. </p><p>நாட்டு மக் களை தங்கம் வாங்க வேண்டாம் என்றார், தங்கம் விலை விண் ணைத் தாண்டியது. </p><p>வெளிநாடு செல்ல வேண்டாம் என்றார், எரி வாயு விலை தாறுமாறாக உயந் தது. </p><p>தற்போது ஒன்றிய அமைச்ச ரவை கூட்டத்தில் பக்கோடா, சாண்ட்விட்ச், பிஸ்கட்டில் சிக்கனம் பார்க்கிறார் மோடி. </p><p>இதன் பொருட்களின் விலையை யும் பிரதமர் மோடி உயர்த்த திட்ட மிட்ள்ளரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.