அமலாக்கத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி அரசு உத்தரவு
29 May 2026, 8:16 pm
<p><strong>அமலாக்கத்துறை பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மோடி அரசு உத்தரவு</strong></p><p>புதுதில்லி ஒன்றிய பாஜக அரசு ‘பணமோசடி தடுப்பு முகமையான அமலாக்கத்துறை யை (Enforcement Directorate - ED)’ தனது கட்சியின் ஒரு பிரிவினை போல பயன்படுத்தி வருகிறது. </p><p>அதாவது எதிர்க்கட்சி ஆளும் மாநி லங்களில் ஆட்சியைக் கவிழ்க்க, எதிர்க்கட்சி களை மிரட்ட, ஒடுக்க, உடைக்க என அம லாக்கத்துறையை பாஜக ஒரு அடியாள் போன்று பயன்படுத்தி வருகிறது. </p><p>இதனால் அமலாக்கத் துறை போன்ற மத்திய முகமைகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்த பாஜக -ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஒன்றிய அரசு துஷ்பிரயோகம் செய்வதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றன. </p><p>இந்நிலையில், நீண்ட காலத்திற்குப் பிறகு அமலாக்கத்துறையின் பணியாளர் கட்ட மைப்பை மறுசீரமைக்க ஒன்றிய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. </p><p>இதன்மூலம் அம லாக்கத்துறையின் ஒட்டுமொத்த பணியாளர் களின் எண்ணிக்கை 2,029-லிருந்து 3,256 ஆக, அதாவது 60 சதவீதத்திற்கும் மேலாக அதி கரிக்கப்பட வாய்ப்புள்ளது என அமைச்சக மூத்த அதிகாரிகள் தரப்பை மேற்கோள் காட்டி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. </p><p>இதுதொடர்பாக மேலும் வெளியாகியுள்ள தகவலில்,”அமலாக்கத்துறையின் நிர்வாகம், சட்டம், தீர்ப்பாயம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் மொத்தம் 1,227 பணியாளர்களை நிதியமைச்ச கம் அதிகரித்துள்ளது.</p><p> இந்த மனிதவள மேம்பா ட்டைத் தொடர்ந்து, உதவி அமலாக்க அதிகாரி பதவியில் 803 கூடுதல் அதிகாரிகளும், அதிகாரி பதவியில் 606 பேரும், உதவி இயக்குநர் பதவி யில் 531 பேரும் பணியாற்றும் சூழல் ஏற்படும்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p><p> இதற்கு முன்னதாக அமலாக்கத்துறையின் பணியாளர் சீரமைப்பு கடந்த 2011ஆம் ஆண்டில் நடைபெற்றது. </p><p>அதன்பின் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அமலாக்கத்துறை ஊழியர் களின் எண்ணிக்கையை மோடி அரசு அதிகரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
