தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி

12 Jul 2026, 9:19 pm
ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி
<p><strong>ஏவுகணை தயாரிப்பும் தனியாருக்கு செல்கிறது! அதானி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மோடி அரசு அனுமதி</strong></p><p>புதுதில்லி நாட்டின் ஏவுகணை தயா ரிப்பு ஒன்றிய பாதுகாப் புத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அதாவது டிஆர்டிஓ, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் உள் ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஏவுகணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. </p><p>இந்திய பொதுத் துறை நிறுவனங்கள் நல்ல முறை யில், சர்வதேச அளவில் போட்டி போடும் அளவிற்கு சூப்பர் தொழில் நுட்பத்துடன் ஏவுகணையை அரு மையாக தயாரித்து வருகின்றன. </p><p>இந்நிலையில், ஏவுகணை தயா ரிப்பையும் தனியார் நிறுவனங்க ளுக்கு தாரைவார்க்க மோடி அரசு அடாவடியை தொடங்கியுள்ளது. </p><p>இதுதொடர்பான அறிவிப்பின் படி, முதற்கட்டமாக ஒன்றிய அரசு ஊழி யர்களின் கடின உழைப்பில் டிஆர்டிஓ உருவாக்கிய ‘அஸ்ட்ரா மார்க் - 2 (Astra Mark 2)’ ஏவுகணை யை தனியார் நிறுவனங்கள் தயா ரிக்க அனுமதி வழங்கப்பட உள் ளது. அஸ்ட்ரா மார்க் - 2 உலகதரம் வாய்ந்தது. உலக நாடுகளுடன் போட்டி அளவிற்கு 180 முதல் 200 கிலோமீட்டர் தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. </p><p>இத்தகைய சூழ லில், பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான அதானி, பாஜக விற்கு அதிகளவில் நன்கொடை அளிக்கும் தனியார் நிறுவனங்க ளான டாடா, பாரத் போர்ஜ், மஹிந் திரா மற்றும் ஐகோம் போன்றவை இனி அஸ்ட்ரா மார்க் - 2 ஏவுகணை தயாரிப்பை மேற்கொள்ள உள் ளன.</p><p> மேலும், பிரலே (Pralay) எனப் படும் 500 கிலோமீட்டர் தூரம் தாக் கும் திறன் கொண்ட டாக்டிக்கல் பாலிஸ்டிக் ஏவுகணையும் தனி யார் நிறுவனங்களுக்கு தனியா ருக்கு செல்கிறது. ஏற்கெனவே விமானங்கள், ட்ரோன்கள், கடற் படை உபகரணங்கள் போன்றவை தனியாருக்கு சென்றுவிட்டன. </p><p>தற்போது ஏவுகணை உற்பத்தியும் தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு தாரைவார்ப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மழுப்பல் விளக்கம் இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் அதிகரித்துள்ளது. </p><p>அர சுக்குச் சொந்தமான பாரத் டைன மிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை.</p><p> அதி நவீன ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா போன்ற நட்பு நாடு கள் ஆர்வம் காட்டி வருகின்றன. </p><p>இதனால் தனியாருக்கு ஏவுகணை தயாரிப்பு ஒப்படைக்கப்படுகிறது என மோடி அரசு மழுப்பலாக விளக் கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.