தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாநில தேர்தல் ஆணையங்களை சீர்குலைக்க மோடி அரசு முயற்சி! இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம்

5 Feb 2026, 3:40 pm
மாநில தேர்தல் ஆணையங்களை சீர்குலைக்க மோடி அரசு முயற்சி! இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம்
<p><strong>மாநில தேர்தல் ஆணையங்களை சீர்குலைக்க மோடி அரசு முயற்சி! இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிபிஎம் கடும் கண்டனம்</strong></p> <p>சென்னை, பிப். 5 - மாநில தேர்தல் ஆணையர்களுக்கான அகில இந்திய மாநாடு என்பது, மாநிலத் தேர்தல் ஆணையங்களை சீர்குலைக்கும் முயற்சி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மாநில அதிகாரம் கூட்டாட்சிக்கு எதிரானது! இந்திய தேர்தல் ஆணையம், எதிர்வரும் பிப்ரவரி 24 அன்று மாநில தேர்தல் ஆணையர்களின் அகில இந்திய &nbsp;மாநாட்டை நடத்தவிருப்பதாக அறி வித்துள்ளது. இது கூட்டாட்சிக்கும், சுயேச்சையாக இயங்கக்கூடிய அமைப்பு களுக்கும் விரோதமான செயலாகும். ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து கூட்டாட்சி மீதும், மாநில அதிகாரங்கள் மீதும் தாக்குதலைத் தொடுத்து வரு கிறது. 25 ஆண்டுகளாக இப்படியொரு மாநாடு நடந்ததில்லை. தற்போது இம்மாநாட்டை நடத்துவதற்கு காரணம் &ldquo;ஒரே நாடு, ஒரே தேர்தல்&rdquo; என்ற தனது அதிகாரக் குவிப்பு நோக்கத்தை முன்னிட்டே ஆகும். தனது அநீதிக்கு &nbsp;துணைக்கு அழைப்பதாகும்! ஏற்கெனவே இந்திய தேர்தல் ஆணை யத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம், நாடு முழுக்க கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. கோடிக்கணக்கான வாக்காளர்களின் உரிமையை எஸ்.ஐ.ஆர் பறித்த வேளையில், மாநிலத் தேர்தல் ஆணையங்களையும் &ldquo;ஒருங்கியக்கம்&rdquo; என்று அழைப்பது அநீதிக்கு துணை போவதேயாகும். மாநில தேர்தல் ஆணையங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 73 மற்றும் 74-இன் படி மாநிலத்தில் உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் களை நடத்தி வருகின்றன. அந்தந்த மாநி லங்களின் சட்டத்திற்கு உட்பட்டு சுயேட்சை யாக இயங்கக் கூடிய மாநில தேர்தல் ஆணையங்களை சீர்குலைப்பதே இம்மாநாட்டின் நோக்கமாக இருக்கும். மேலும், ஒன்றிய பாஜக அரசின் அரசியல் &nbsp;நோக்கத்திற்கு இயைந்து போகச் செய்வ தற்கும் &nbsp;இந்த மாநாடு பயன்படும். &nbsp;மாநாட்டையே &nbsp;கைவிட வேண்டும்! சுயேட்சையாக இயங்க வேண்டிய இந்திய தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறி &nbsp;விட்டது என்பதால் மாநில தேர்தல் ஆணை யங்களையும் அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, மாநில தேர்தல் ஆணையர்களின் மாநாட்டை கைவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப் பட்டு உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.