தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்து

16 May 2026, 8:08 pm
விபத்து
<p><strong>விபத்து</strong></p><p>உயர் பொறுப்பிலிருக்கும் அவர், எப்போதும் பிறரோடு நேரங்காலமின்றி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். அதிலும் எந்நேரமும் கைப்பேசியில் அளவளாவிக் கொள்வதில் பேரின்பம் கொண்டிருப்பார். </p><p>நட்பு பாராட்டுவதில், அன்பை விஸ்தரிப்பதில், பிறர் இடர்களில் வருத்தம் தெரிவிப்பதில், காலங்கருதி உதவுவதில் அவருக்கு நிகர் அவர்தான். </p><p>இருசக்கரம் ஓட்டும்போது கழுத்திற்கும் தோளிற்கும் நடுவில் இடுக்கிபோல கைபேசியை நழுவவிடாமல் அணைத்துக்கொண்டு வெகுதூரம் பேசிப்போவார்.</p><p> உரசிப்போகும் வாகன ஓட்டிகளின் வசைகளை சாலைகளில் வாங்கிக் கட்டியிருக்கிறார். பல விபத்துகளிலிருந்து தப்பித்துமிருக்கிறார். </p><p>இருந்தென்ன, காதுக்கும் மூளைக்கும் எதுவும் எட்டியதாகத் தெரியவில்லை. அந்தயிடத்தில் அறிமுகவற்றவரோடு அவர் விவாதம் செய்வதில்லை.‌</p><p>கண்டும் காணாமலும் போய்விடுவார். காரணம் எதிர்த்தரப்பினரின் பலமும் பலவீனமும் அவருக்கு தெரியாது என்பதுதான். </p><p>ஆழம் தெரியாமல் காலை விடமாட்டார். </p><p>சாலையில் யாரேனும் அவரைக் கண்டால், நிச்சயம் கழுத்துநரம்பு அவரவர்க்கு பிடித்திழுத்துக்கொள்வது உறுதி. </p><p>காதில் செல்லை வைத்தபடியே காலை மாலை நடைப்பயிற்சி செய்பவர்.</p><p> பேச்சு சுவராஸ்யத்தில் ஒரு இலக்கற்ற தொலைவிற்கு சென்றுவிடுவதும் உண்டு. </p><p>இதற்குள் பல மிஸ்டு கால்கள் வரிசை கட்டியிருக்கும். </p><p>‘சார்ஜ்’ இல்லாமலோ, சிக்னல் பிரச்சனைனாலோ இணைப்புத் துண்டித்தாலொழிய, இவராக இணைப்பைத் துண்டிப்பதில்லை. </p><p>இந்த நேரங்களில் எதிரில் எவர் வந்து நின்றாலும் தெரியாது. கழிவறை சென்றால்‌கூட பிறர் வந்து திட்டத்தான் வேண்டும். </p><p>அப்படியொரு ஏகாந்த நிலையில், மலர்வனத்தில் இளைப்பாறுவதுப்போலவே பேசிக்கொண்டிருப்பார். </p><p>செல் பேசியின் மீது தீராத ஒருவகைப் போதை.. </p><p>பேச்சுக்குப் பேச்சு கலகலவெனச் சிரிப்பார். இடம் பொருள் பார்க்கமாட்டார். தடாலடியாகப் பேசுவார். கருத்தும் சொல்வார். </p><p>கடிந்தும் கொள்வார். ச</p><p>ட்டெனப் பாடுவார்</p><p>. சிலநேரம் மென் மோனத்திலிருப்பார். கண்களை அகல விரித்து, செல்லை நோண்டுபவர்கள் ஒருவகையெனில், வாயை அகல விரித்து இவர் பேசுவது ஒருவகையாயிருக்கும். இரவுகளில் உறக்கம் இவரைத் தழுவினாலொழிய இவர் உறக்கத்தைத் தழுவிக்கொண்டதே இல்லை.</p><p> அலுவலகத்தில் அலுவலானப் பேச்சு ஒருகட்டத்தில் திசைமாறிப்போய், மதியச் சாப்பாடே வந்துவிடும். </p><p>இரவில் தொடங்கினால் சேவலும் கூவிவிடும். பெரும்பாலும் கையிலிருக்கும் சார்ஜர் போட்டபடிதான் போன் பேசுவார். </p><p>வீட்டின் அதிகாரம் மொத்தமும் இவரின் கைப்பிடிக்குள்ளிருப்பதால், மறுதலித்துப் பேசுவதற்கு யாருக்கும் துணிச்சல் இராது. </p><p>அவ்வப்போது பொறுமலிருந்தாலும் வரும் இடையூறுகளைப் பொசுக்கி விடுவதுபோல் ஒரு பார்வை பார்ப்பார். </p><p>அவரின் இணையர் அன்புதழுவ கையில் காப்பி ஆற்றியவாறு கொடுப்பார். </p><p>போனில் பேசியவாறு கையால் சைகைகாட்டி டேபிளில் வைத்துவிடச் சொல்லுவார். அவர்களின் அக்கறையின் மீது லட்சியம் கொள்ளமாட்டார். </p><p>குடும்பத்தோடு அமர்ந்து உண்டாலும், தொலைவில் எங்கோ அப்பா இருப்பதுபோலவே தோன்றும். </p><p>உண்பது இட்லியா சப்பாத்தியா தெரியாது. அது நல்லாருக்கிறதா இல்லையா‌? உப்பாவது இருக்கிறதா? ஏதாவது‌சொல்லனுமே, மாட்டாரே என அன்பிற்கு ஏங்கி நிற்கும் குடும்பத்திற்கு, மன குமைச்சல்கள்தான் மிக அதிகம். </p><p>எல்லோருக்கும் படுக்கையறை ஒன்றுதான். இருந்தென்ன? வாழ்க்கை தனித்தனியேதான். பிள்ளைகள் எதேச்சையாக நெருங்கி வந்தால் சிறு புன்புறுவலோடு புருவத்தால் சைகைகாட்டி வேலையாட்கள் போல காத்திருக்கச் சொல்லுவார். </p><p>காணும் மனைவி “போனை கட்டிக்கொண்டே அழட்டும் நீங்க வந்து தூங்குங்க” . அவர் மனைவியின் கோபத்தில் விரைப்பிருக்கும், ஒருநாளும் சத்தமிருக்காது. </p><p>அவர் இன்னாருக்கென்று திட்டமிட்டு போன் பேசுவதில்லை. குலுக்கலில் விழுவது போன்றுதான். </p><p>சேவ் (Save) வாகியிருக்கும் முந்தி வரும்‌ஒரு எண்ணிற்கு கால் (call) செய்வார். சிக்கிக்கொண்டவரின் கதியோ அதோகதிதான். </p><p>இப்படியாக அழைக்க எதிர்முனையில் எடுக்கவில்லையெனில் அடுத்து முயற்சிக்கவே மாட்டார்.</p><p> அச்சமயம் கோபம் தலைக்கேறியிருக்கும். தவறிய அழைப்பைக்கண்டவர் திரும்ப அழைத்தாலும் தொடர்ந்த பல அழைப்பிற்குப்பிறகே எடுப்பார். </p><p>தன்தரப்பு நியாயத்தை முன்வைத்தாலும் உதாசினப் படுத்துவார். எப்போதும் சரியாக இருக்கக்கூடியவர் என்பதால் தான் பிடித்தபிடியில் திமிராக இருப்பார். இருவருக்குமான போன் உரையாடல்களில் ஒருவருக்கு, மற்றொருவரின் அழைப்போ, இல்லை சிறுவேலையோ வந்துவிடும். சார் ஒரு ஐந்து நிமிடத்தில் நானே திரும்ப அழைக்கிறேன் பிளீஸ்.</p><p> ஒரு நண்பரின் கால் வருகிறது. இல்லை வேறு அவசரப்‌போன் வருகிறதெனக் கூறி கட் செய்தால் போதும், வேறுவினையே வேண்டாம். அவமதிப்புக்குள்ளானவராகவும், பெரும் கவுரவப் பிரச்சனையாகவும் கருதி, நீண்ட நாட்கள் பேசமாட்டார். </p><p>உயர் அதிகாரி . நல்ல பொருளாதாரப் பின்னணி கொண்டவர். எல்லோருக்கும் நம் தயவுதானே தேவைப்படுகிறது என்ற கர்வம் அவருக்கு நிலை கொண்டிருந்தது. </p><p>என்னைவிட உங்களுக்கு பெரிய ஆள் உண்டா? நானே உங்களிடம் பேசுவது உங்களுக்குப் பெருமைதானே! அப்படி என்னிடம் பேசுவதைக் கடந்து உங்களுக்கு வேறென்ன வேலை இருந்துவிடப் போகிறது.</p><p> என்ற அதிகாரத்தொனியும் தற்பெருமையும் மேலோங்கி இருக்கும். அதேசமயம் இந்த அதிகாரிக்கு வரும் அழைப்புகள் பெரும்பாலும், சார், வணக்கம். </p><p>நலமா?‌பிசியா இருக்கிங்களா? ரெண்டுநிமிடம் பேசலாமா? மிகத் தன்மையாக, அவரின் அனுமதி பெற்ற பிறகேதான் பலரும் பேசத் தொடங்குவார்கள். அதுதானே நாகரீகமும்கூட? ஆனால் அதிகாரியோ அப்படியல்ல, “போன் போட்டதும் வழவழ கொழகொழ” தொனத்தொனவென பேசத் தொடங்கிவிடுவார். </p><p>தொடங்குவது ஒருபக்கமிருக்க, முடிக்கத் தெரியாமல் பேசுகிறாரா? இல்லை முடிக்க மனமின்றித் தவிக்கிறாரா? எதிர்முனையிலிருப்பவர் எந்தச் சூழலில் இருப்பார் என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காதவர்.</p><p> சிலர் கொஞ்சம் கடுப்பாக பட்டும் படாமல் எல்லாவற்றுக்கும் ஈல் மட்டுமே இட்டுக்கொண்டிருப்பார்கள். சிலசமயம் பேச்சுக்கிடையில் நிறுத்தி, சொன்னதை திரும்பவேறு‌கேட்பார். திடுமென எதிர்முனை தடுமாறினாலும் “அதான் இதானென்று” பலரும் சமாளித்து விடுவார்கள். </p><p>அதேபோல இவருக்கு போன் வந்துவிட்டால் போதும் தட்டாமல் குளியலறையில் சோப்பிட்டக் கையோடும் எடுத்துப்பேசும் பழக்கத்துக்காரர்தான். </p><p>அவருக்கு ஒன்றுமில்லை. மறுமுனையில் பேசுபவருக்குத்தான் மறுமணம் நடக்குமளவிற்கு குடும்பத்தில் ஊடல்கள் முளைவிட்டிருக்கும். </p><p>இவரின் அலைபேசி எண்ணிலிருந்து தப்பித்தவறி போன் வந்தாலே எடுப்போமா வேண்டாமா? பலரும் முழி பிதுங்கியே நிற்பார்கள்.</p><p> பல நேரங்களில் பயந்து அலண்டவர்கள், அந்த நேரத்தை அவதானித்து செல்லை ‘சுட்ச்ஆப்’ செய்யும் குரூரமும் நடந்துவிட்டிருக்கிறது. </p><p>நாம் அழைக்கும்போது பிறர் என்ன செய்துகொண்டிருக்கிறார்களோ ஒருதுளி நினைக்காத மனிதர் அவர். </p><p>போன் எடுக்கவில்லையெனில் பொங்கித்தான் எழுவார். </p><p>அவரின் சிறு பிள்ளைத்தனத்தைப் புரிந்துகொண்டு சிறிது நேரமாகி போன்செய்தால், இயல்பாகப் பேசமாட்டார். </p><p>அவரது பேச்சில் இருவருக்குமான உரையாடல்கள் சிக்கிக்கொள்ளும் பழைய கேசட், டேப்ரிக்கார்டர் போலவும், இடையிடையே அறுந்துபோகும் ரீல் போலவும் இருக்கும். எத்தனை ‘சாரி’ சொன்னாலும் மசியாதவர். </p><p>ஒருவழியாக அழைத்தவர்கள் நமக்குக் கிடைத்த மரியாதை இவ்வளவுதானோவென நினைத்து தானாகவே விலகிக்கொள்வார்கள். </p><p>அவரோடு போனில் வழக்கமாக உரையாடும் ஒருவர், ஒருநாள் அவரின் மனைவியைக் கண்டார். </p><p>என்ன மேடம், சார் போன் பண்றதே இல்லையே, பிஸியா இருக்காரா? என்று கேட்டார். இப்போதெல்லாம் தேவையின்றி யாரிடத்திலும் பேசுவதில்லையே என்றார் மனைவி. </p><p>சார், அப்படி பேசாமல் இருக்க மாட்டாரே? அவரின் மழலைப்பேச்சும் எங்களைப்பற்றியான நினைப்பும் இப்போது எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறது தம்பி. கணவர் ஆரோக்கியமாக இருக்கையில் உணர்வின்றி இருந்தார்.</p><p> குறித்த நேரத்தில் அவரை மருத்துவமனை சேர்த்ததால் உயிருக்கு ஒன்னும் மோசமில்லை.</p><p> இதுபோதும். என்றவரின் முகத்தில் புன்னகை இழையோடிருந்தது. </p><p>வீட்டில் ஓய்விலிருக்கிறாராம். தன் சுயத்தை உணர்ந்தவராய் பெற்றப் பிள்ளைகளிடமும் மனைவியிடமும் நிறைவாகப் பேசுகிறார். </p><p>அக்கறை எடுத்துக்கொள்கிறார். </p><p>அவருக்கென வரும் சொந்த அழைப்புகள் முற்றிலும் குறைந்து விட்டதாம்.‌அப்படியே வந்தாலும் அவரது அலுவலகத்தின் முக்கிய அழைப்புகள் யாவையும் அவரது மனைவியே எடுத்துப் பேசுவாராம். ஆறுமாதத்திற்கு முன்னால் வழக்கம்போல காதில் செல்லை வைத்து கழுத்தை சாய்த்தவாறு பேசிக்கொண்டிருந்தவருக்கு ரத்தவோட்டமின்றி ஒரு பக்கமாக மறத்துப்போயிருக்கிறது. </p><p>சிறிது நேரத்தில் உடல் ஒரு பக்கமாக செயலிழந்திருக்கிறது. (</p><p>ஸ்ட்ரோக்) பக்கவாத நோயால் உயர்சிகிச்சையெடுத்தவர் சில மாதம் கழித்து திரும்பியிருக்கிறார். </p><p>தொடர்ந்து அலை பேசிக்கொண்டிருந்ததால் கதிர்வீச்சு அவரின் மூளை நரம்புகளை பாதிக்கச் செய்திருக்கிறது. </p><p>பார்வையும் மங்கியிருக்கிறது. பிறரிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கும்போது ஒருவார்த்தை நம்மிடத்திலும் பேசிவிடமாட்டாரா, பிள்ளைகள் பயணத்திற்காவது டாட்டா காட்டிவிட‌மாட்டாரா‌என எத்தனைமுறை ஏங்கியிருக்கிறேன்.</p><p> நடமாடும் பிணமாகக்தான் நானும் பிள்ளைகளும் ஒவ்வொருநாளும் அவரோடு கழித்திருந்தோம். </p><p>அலைபேசியில் வெகுநேரம் பேசக்கூடாதென மருத்துவர்கள் அவரை எச்சரித்திருக்கிறார்கள். </p><p>வேறுவழியில்லை. இனி எங்களிடம் மட்டுமே பேசப்போகிறார் என்றவாறு மகிழ்ந்து போனார் அவரின் மனைவி.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.