தரங்கம்பாடியில் கட்டணமில்லா கூடுதல் பயிற்சி வகுப்பு மையம் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>தரங்கம்பாடியில் கட்டணமில்லா கூடுதல் பயிற்சி வகுப்பு மையம் நிவேதா எம்.முருகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்</strong></p>
<p>மயிலாடுதுறை நவ.16- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில், கட்டணமில்லா ஒருங்கிணைந்த கூடுதல் பயிற்சி வகுப்பு மையத்தை பூம்பூகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் துவக்கி வைத்தார். அரசு துறைகளில் உள்ள காலிhd பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. படித்த, வேலையற்ற இளைஞர்கள் போட்டி தேர்வு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெற, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பினை, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் துவக்கி வைத்தார். இந்த வகுப்பில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். தரங்கம்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி குமரவேல், துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.</p>
