அனைத்து ஊராட்சிகளிலும் எம்எல்ஏ நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு
23 Feb 2026, 5:35 pm
<p><strong>அனைத்து ஊராட்சிகளிலும் எம்எல்ஏ நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு</strong></p>
<p>புதுக்கோட்டை, பிப்.23- சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி பாரபட்சமின்றி, தொகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை பேசினார். கந்தர்வகோட்டை தொகுதியின் 5 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் கந்தர்வகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ பேசுகையில், “புது க்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய தொகுதி கந்தர்வகோட்டை. தொகுதியில் சிப்காட், கந்தர்வ கோட்டையை பேரூராட்சியாக தரம் உயர்த்தியது, மருத்து வமனை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை கடந்த 5 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளோம். தொகுதியில், ஒவ்வொரு ஊராட்சியிலும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து குறைந்தது ஏதாவது ஒரு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த அதிமுக அட்சியில் வேளாண் தொழிலை அழித்துவிட்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று அறிவித்த திட்டத்தை எதிர்த்து போராடி கைவிடச் செய்தோம். அதேசமயம், தற்போது, 250 ஏக்கரில் வேளாண் தொழில் சார்ந்த தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வெற்றி பெற்ற 2 எம்எல்ஏகளும் தமிழக மக்களுக்காக சட்டப் பேரவையில் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம். எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருந்திருந்தால் இன்னும் நிறைய கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம்’’ என்றார்.</p>
<p> </p>
