தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!

14 May 2026, 9:41 pm
‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!
<p><strong>‘தேர்தலில் புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி’ தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன்!</strong></p><p>திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேச்சு சென்னை, மே 14 - சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு, தலைவர் என்ற முறையில், தானே பொறுப்பேற்றுக் கொள்வதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். </p><p>திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை அண்ணா அறிவா லயத்தில் வியாழக்கிழமை (மே 14) அன்று நடைபெற்றது. </p><p>இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பேசியிருப்பதாவது: நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை.</p><p>திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு தான். இப்போது நம்மைப் பார்க்கும் அனைவருமே, ஏன் சமூகவலை தளங்களிலும் கூட, ‘எப்படியும் திமுக தான் ஜெயிக்கும்னு நினைச்சோம். </p><p>அதனால, என்னோட ஒரு ஓட்டுல என்னாகிடும்னு தெரியாம போட்டுட்டோம்’-னு புலம்புறாங்க. அதுமட்டுமில்ல, இப்படி ஒரு கட்சிக்கு வோட்டு போட்டு – ஆட்சியில உட்கார வெச்சிட்டோமே-னு பலரும் வருந்தி பதிவு போடுறதையும் பார்க்கிறேன். </p><p>இதுதான் நம்ம ஐந்தாண்டு கால நல்லாட்சிக்கு கிடைத்த அங்கீகாரம். நம்ம உழைப்புக்கு கிடைத்த சான்று! ஆனா, அது வெற்றியாக மாறாமல் போய் விட்டது. பொதுவாழ்க்கைக்கு வந்தா வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். </p><p>மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். இந்தப் பக்குவம் வேறு யாரையும் விட நமக்குத்தான் அதிகம். கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையாக உழைத்தேன்.</p><p>உங்களையும் உழைக்க வைத்தேன். என் சக்திக்கு மீறியும் உழைத்தேன். உங்களையும் ஓய்வே இல்லாமல் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்யாத சாதனைகளை நாம் செய்திருக்கிறோம்.</p><p> கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நம்ம ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம் ஆட்சி அமைக்க முடியவில்லை. </p><p>இதற்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. திமுகவின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம்.</p><p>வெற்றி கிடைத்தால், அதன் பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக்கொள்வது தான் நியாயம். நீங்களும் இந்த தோல்விக்காக, அடுத்தவர் மேல் பழி போடாதீர்கள். </p><p>இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. </p><p>சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ அல்ல. பெரும் பாதிப்பு என்ற அர்த்தத்தில் அதைச் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது. தமிழ்நாட்டு மக்களை இதில் இருந்து, எப்படி மீட்டெடுக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம். நாம் பல வெற்றிகளுக்குச் சொந்தக்காரர்கள். </p><p>நமது இந்த தோல்வி தற்காலிகம்தான். வெற்றியை நோக்கி பயணிப்போம். திட்டமிடுவோம். தீவிரமாக உழைப்போம். மீண்டு வருவோம்! மீண்டும் வெற்றி பெறுவோம்.” இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.</p><p>தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்யவும் தொண்டர்களின் கருத்துகளை சேகரிக்கவும் தனி இணையதளம் தொடங்கப்படும் என்றும், அதைத் தொடர்ந்து கட்சி அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.