‘கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்!’ திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
22 May 2026, 8:33 pm
<p><strong>‘கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம்!’ திமுக-வினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்</strong></p><p>சென்னை, மே 22 - திமுக தலை மை யிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள், தவெக தலைமையிலான அமைச்சரவையில் இணைந்ததை அடுத்து, அந்தக் கட்சிகளின் நிலைபாட்டை, திமுக முன்னணி தலைவர்கள் சிலர், சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். </p><p>இதனை குறிப்பிட்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமது சமூகவலைதளப் பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். </p><p>அதில், “மாண்புமிகு அமைச்சர் களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் வன்னி அரசு அவர்களுக்கும், ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்!” என தெரிவித்திருக்கும் மு.க. ஸ்டாலின், “தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. </p><p>எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பது தான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள்” என்று கூறியுள்ளார். </p><p>“பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். </p><p>அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
